அயல்நாடுஅழைப்பிதழ்ஈழம்

தமிழினியின் இரு நூல்கள் வெளியீடு, கிளிநொச்சி

அழை-தமிழினியின் நூல்கள் வெளியீடு : azhai_thamizhininuulveliyeedu+

தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும் !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் மறைந்த

தமிழினி அவர்கள் எழுதிய

இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா,

பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 சனிக்கிழமை

அன்று கிளிநொச்சியில் கூட்டுறவாளர் கல்லூரி மண்டபத்தில்

மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.

வெளியீட்டு உரையை மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்துகின்றார். ‘தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும்’ எனும் தலைப்பில் முன்னாள் போராளி தங்கராசா சுதாகரன் உரையாற்றுகின்றார்.

முன்னாள் போராளி யாழ்நிதி,

‘ஒரு கூர்வாளின் நிழலில் (போராட்டக்குறிப்புகள்),

போர்க்காலம் (கவிதைகளின் தொகுப்பு)’

ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டு உரைாயாற்றுகிறார்.

அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு நூல் வெளியீட்டு விழாக்குழுவினர் அழைக்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *