வெருளி நோய்கள் 554-558: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 549-553: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 554-558 554. ஒருக்க வெருளி – Tongyiphobia ஒருக்கம்(sameness) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒருக்க வெருளி. நம்மிடம் இருக்கும் ஆடை/நகை/பொருள்போன்ற ஒன்றைப் பிறர் வாங்கித் தருதல், நம்மிடம் இருப்பதுபோன்ற ஒன்றைப் பிறர் அல்லது பிறரிடம் இருப்பதுபோன்ற ஒன்றை நமக்கு வாங்குதல் போன்ற சூழல்களில் காரணமற்ற தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். நம் பிள்ளைகள்போல் பிறர் பிள்ளைகளும் படிப்பிலோ விளையாட்டிலோ ஒத்து இருந்தாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். ஒருக்கம்(sameness) = ஒரேபடித்தான நிலை/ஒரே தன்மை /ஒத்த தன்மை….
தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! “திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி!” (தினச்செய்தி 27.10.2019) என்றும் “தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!”(அறம் இணைய இதழ் 30.10.2024) என்றும் முன்னரே எழுதியுள்ளேன். தீபாவளி குறித்த பெரியாரின் கட்டுரை, பிற இதழில் வந்தவை குறித்தும் அகரமுதல இதழில் வெளியிட்டுள்ளேன். இருப்பினும் தீபாவளி குறித்து உயர்வாகவே எழுதுவோர் பெருகி வருவதால் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.கடவுளுக்கு உருவம் இல்லை என்பதே தொன்மையான கருத்து. அருவமான கடவுளை வழிபடுவதற்காக ஒளி வழிபாட்டைப் பின்பற்றியிருக்கிறார்கள். மரபு வழியிலான ஒளி…
வெருளி நோய்கள் 549-553: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 544-548 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 549-553 549. ஒட்டகச் சிவிங்கி வெருளி – Kamilopardaliphobia/ Giraffeophobia(21) ஒட்டகச்சிவிங்கி குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒட்டகச்சிவிங்கி வெருளி. kயmēlos என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஒட்டகம் என்று பொருள். Kamilopardali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒட்டகச்சிவிங்கி. விலங்கு வெருளி உள்ளவர்களுக்கு ஒட்டகச் சிவிங்கி வெருளி வர வாய்ப்புள்ளது. 00 550. ஒட்டி வெருளி – Pittakionophobia / Stickerphobia ஒட்டி(Sticker) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒட்டி வெருளி. ஒட்டி வெருளிக்கு ஆளானோர் கணிசமான எண்ணிக்கையில்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில் திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல. insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பது. நொடிப்பு என்று சொல்லலாம். இந்த நிலைக்கு ஆளானவர் insolvent – நொடித்தவர் எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம் நொடித்துப் போனவர் >…
வெருளி நோய்கள் 544-548: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 544-548 544. ஐரிய வெருளி – Hibernophobia ஐரிய மக்கள் தொடர்பானவை மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஐரிய வெருளி. அயர்லாந்து நாட்டினரிடம், அவர்களது ஐரிய மொழியிடம், அவர்களின் அடக்குமுறைப்போக்கு, வேறுபாட்டுணர்வு முதலானவற்றிடம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலானற்றிடம் ஏற்படும் மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொண்டிருப்பர். 1863 இல் காதரீன் ஓ நெயில்(Kathleen o’neil) என்பவர் உதவி தேவை – ஐரியர் யாரும் விண்ணப்பிக்க வேண்டா (Help wanted – no…
நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! –தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 16 பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே! சினம் கூடாது எனச் சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், பதினெண்கீழ்க்கணக்குப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், சித்தர்கள், வள்ளலார் முதலிய அண்மைக்காலப்புலவர்கள், மேனாட்டறிஞர்கள் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர், “அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்“ என்கிறார். நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை, …
குறட் கடலிற் சில துளிகள் 33. இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்: இலக்குவனார்திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 33 இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண்: ௪௱௪௰௭ – 447) கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்? பதவுரை இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்; துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை…
வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 534-538: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 539-543 539. ஐசுலாந்து வெருளி-Islandophobia ஐசுலாந்து(Island) தொடர்பானவற்றில் காரணமின்றிப் பேரச்சம் கொள்வதே ஐசுலாந்து வெருளி. ஐசுலாந்து நாடு, ஐசுலாந்து மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு, பொழுதுபோக்கு முதலியன என ஐசுலாந்து தொடர்பானவற்றில் காரணமின்றி வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர். 00 540. ஐந்தாய ஆட்ட வெருளி -Yahtziphobia ஐந்தாய ஆட்டம்(the game Yahtzee) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஐந்தாய ஆட்ட வெருளி. ஐந்து ஆயம்(தாயக்கட்டை/கவறு//பகடைக்காய்) கொண்டு விளையாடும் ஆட்டம் ஐந்துஆய>ஐந்தாய ஆட்டம். 00 541. ஐந்தாம் எண்…
கக. வழக்கில் வழுக்கள் – திருத்துறைக்கிழார்
( க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கக. வழக்கில் வழுக்கள் எழுவாய் தமிழ் மொழி தோன்றிய காலவரையறை இன்னும் தமிழறிஞர்களால் கணிக்கவியலாத புதிராயுளது. உலக மொழிகள் யாவற்றினும் முதல் தாய்மொழியும் தமிழே என மொழி ஆராய்வாளர் மொழிகின்றனர். அத்தகு மொழி, மூவேந்தர்களாகிய சேர – சோழ – பாண்டியர்களால் சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பெற்றது. பாண்டியப் பேரரசு, முத்தமிழ்க் கழகங்கள் மூன்று கண்டு – தமிழைப் பேணிற்று. அவர்கள்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும். தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை…
வெருளி நோய்கள் 534-538: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 529-533: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 534-538 ஏளனமாகப்(Ridicule) பேசப்படுவது குறித்த பேரச்சம் ஏளன வெருளி.பொதுவிடங்களில் ஏளனமாகப் பேசப்படுவோம் என்று அஞ்சுதல்; இதனால் தரம் தாழ்த்தப்பட்டதாக வருந்துதல்; தன் மதிப்பு குறைவதாகப் பேரச்சம் கொள்ளல்; கேலிப்பொருள் ஆக்கப்பட்டதாக வருந்துதல் ஆகியன இத்தகையோருக்கு ஏற்படும்.தலைக்குனிவிற்கு ஆளாவோம் என்ற அச்சம், தாழ்வு மனப்பான்மை, தன்மதிப்புக் குறைப்பிற்கு ஆளாவோம் என்ற கவலை போன்ற வற்றால் கேலி செய்யப்பட்டாலும் கேலி செய்யப்படுவோம் என எண்ணினாலும் இப்பேரச்சம் வருகிறது.தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், தங்களைப் பிறர் ஏளனமாக எண்ணுவதாகக் கருதி ஏளன…
வெருளி நோய்கள் 529-533: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 524-528: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 529-533 ஏமாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏமாற்ற வெருளி.இவ்வெருளி உடையோர் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.00 ஏரி அல்லது சதுப்பு நிலம் குறித்துக் காரணமின்றி வரும் அச்சம் ஏரி வெருளி.ஏரி அல்லது சதுப்பு நிலத்தில் மூழ்கிவிடுவோம், ஏரி நீர் துன்பம் தரும், ஏரி உடைப்பெடுக்கும், ஏரி வறண்டால் வேளாண்மை முதலியன பாதிப்புறும் முதலிய கவலைகளுக்குத் தேவையின்றி ஆளாகி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.Limne…
