ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்-இணைய அரங்கம்

தமிழே விழி!                                                                                     தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு: சித்திரை 15, 2055 / 28.04.2024– இணைய அரங்கம் காலை 10.00 ஆளுமையர் உரை 91 & 92 ; என்னூலரங்கம்  கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: மாணவர் உரைச்சுடர் செல்வி ந.காருண்யா தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்  “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்ச்செம்மல் திருக்குறள் நாவை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி) பூங்கொடிநாவலரின் முன்னை நிகழ்ச்சி மீன்புலி கயலால் மேம்படு தமிழகவிடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,இவையே யான்செய் தவறென இயம்பி,நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;மறுநாள் மாறி `மதியே இல்லார்,சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ- தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 61-80 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்: இதழரங்கம்

தமிழே விழி!                   தமிழா விழி!   தமிழ்க்காப்புக் கழகம் தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள் இதழரங்கம் சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல்  அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம். ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த…

சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 251-255 251. Abstinence தவிர்ப்பு   விட்டொழித்தல், உண்ணாநோன்பு, துய்ப்புத் தவிர்ப்பு   விருப்பமான ஒன்றை விலக்கல் அல்லது செய்யாது விடுதல்.   காண்க: abstain; 2. Abstaine  252. Abstract                           பொருண்மை;   பொழிப்பு; பிழிவு; கருத்தியலான; உரைச்சுருக்கம் எடுகுறிப்பு; சுருக்கக் குறிப்பு, (சுருக்கக்குறிப்புகள்,).   ஒரு நூல் அல்லது ஆவணத்தின் அடிப்படைக் கருத்தின் சுருக்கம் மக்கள் அல்லது பொருட்கள் பற்றிய பொதுப்படையான கருத்தைக்…

உ.வே.சா. வின் என் சரித்திரம் 53: சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு

(உ.வே.சா. வின் என் சரித்திரம் 52: சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் – தொடர்ச்சி) என் சரித்திரம்சிதம்பரம்பிள்ளையின் கலியாண நிறைவு அவற்றைக் கவனிப்பதற்காக அவர் அங்கே இருக்கிறார்.கல்லிடைக்குறிச்சியிலும் திருவாவடுதுறையைப் போலவே மடமும் அதற்குஅங்கமாகிய கோயில் முதலிய இடங்களும் பரிவாரங்களும் உண்டு.சந்நிதானம் சின்னப் பட்டத்தில் இருந்தபோது சில வருடங்கள் அங்கேஎழுந்தருளி இருந்தது இந்த ஆதீனத்திற்கு இராசதானி நகரம் போன்றதுதிருவாவடுதுறை. இளவரசர் இருத்தற்குரிய நகரம்போல விளங்குவதுகல்லிடைக்குறிச்சி, சின்னப் பட்டத் திலுள்ளவர்கள்கல்லிடைக்குறிச்சியிலிருப்பது வழக்கம். அவர்களை இளவரசென்றும்சொல்வதுண்டு.” “திருவாவடுதுறை ஆதீனம் தமிழ்நாடு முழுவதையும் ஆட்சி புரிவதுபோலல்லவா இருக்கிறது?” என்று நான் ஆச்சரியத்தோடு வினவினேன்….

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 12 : தியாக வீரம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்- தொடர்ச்சி) தமிழர் வீரம்தியாக வீரம்9. தியாகத்தின் சிறப்பு பிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும். தமிழகத்தில் என்றும் தியாகத்துக்குத் தனிப் பெருமையுண்டு. “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்” என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன்.1 குமணனும் இளங்குமணனும்கொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன் முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன் என்னும்…

தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! – பழ.தமிழாளன்

தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! 1 சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்                எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்     செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே         வைப்பவரைத்  தேரல்   வேண்டும் ! தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப                          ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்       தீராத  இன்னலையே  இருகையால்         வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி                              ரைச்   செகுத்தல்  போல       குடியாட்சி  மாண்பழிக்கும்  கட்சிக்கே                வாக்கினையே  அளிப்போ  மாயின் ஏரார்த்த  தமிழ்மரபும் …

வள்ளுவர் சொல்லமுதம் 16: அ. க. நவநீத கிருட்டிணன்: ஊக்கமும் ஆக்கமும்

(வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்கக ஊக்கமும் ஆக்கமும் வினை செய்தற்கண் கொள்ளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும். ஊக்கமே வாழ்வில் உயர்வைத் தருவது. ஆதலின் ‘ஊக்கமது கைவிடேல்‘ என்று ஓதுவார் தமிழ் மூதாட்டியார். ஊக்கம் உடை யவர் எல்லாம் உடையவர் என்றே சொல்லப் பெறுவர். ஊக்கம் இல்லாதவர் என்னுடையரேனும் இலர் என்பர் வள்ளுவர். – ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம். பிற செல்வங்களை இழப்பினும் ஊக்கத்தின் உறுதுணையால் அவற்றைப் பெறலாம். ஊக்கம் இல்லாதார்…

சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 : இலக்குவனார் திருவள்ளுவ

(சட்டச் சொற்கள் விளக்கம் 241-245 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 246-250 246. abstain. V   தவிர்; விலக்கு விலகியிரு; தவிர்த்திரு (வி)   விலகி யிருத்தல் ; தவிர்த்திருத்தல் (பெ)   வாக்களித்தல் போன்ற எதிலும் பங்கேற்றுக் கொள்வதிலிருந்து விலகி யிருத்தல். 247. Abstaine  விட்டொழிப்பவர்   ஒரு பழக்கத்தை விட்டொழிப்பவர். பொதுவாக போதை பொருள்களை உட்கொள்வதைக் கைவிடுவதைக் குறிப்பிடுகிறது.   உணவைவிட்டொழிப்பவரைக் குறிக்குமிடத்தில் (உண்ணா)நோன்பு எனப் பொருளாகிறது. 248. Abstaining from carrying out…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி நாவலர் ஆறுதல் உரை எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன்,எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’ நாவலர் ஆறுதல் உரை `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்பமுன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே;தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்;வெற்றி வெற்றி விளைவது கண்டோம்;உற்றநின் துயரால் உளமது கலங்கேல்ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; நாவலர் தலைமேற் கல் கல்லார் நல்வழி நில்லார் புல்லார்,குழப்பம்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

1 2 766