ஐ.நா.வின் தீர்மானம் – இந்தியாவின் நழுவல் – தோழர் தியாகு
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், வரும் புரட்டாசி 25, 2053/ 12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை , தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022- அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறுகிறார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
இந்திய மக்கள் முன்னணி(P.F.I.) தடை நீக்கக் கோரிப் போராட்டம்
புரட்டாசி 21, 2053 /8.10.2022 சனி மாலை 4.00 வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம் பாக்கம், சென்னை
பண்ணிசை விழா 2022, வட அமெரிக்காவில் இணைய வழியில்
புரட்டாசி 21, 2053 / 08.10.2022 தலைமையுரை: தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்
தமிழ்க்காப்புக்கழகம்:ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ – 441) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர் மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான் குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார் சித்த மருத்துவ வல்லுநர் மரு.அசித்தர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode:…
தமிழ்நாடு இனி-காந்தியும் அம்பேத்கரும் : தோழர் தியாகு
புரட்டாசி 18, 2053 ஞாயிறு 05.10.2022 இரவு 7.00 கூட்ட எண் : 8641368094 கடவு எண் : 12345
அரசியல் வகுப்பு 97, தோழர் தியாகு
புரட்டாசி 11, 2053 புதன் 28.09.2022 இரவு 7.00 தமிழ்நாடு இனி – தோழர் தியாகு இணைய வழிக் கூட்டம்
தருமபுரம் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா
இசைப் பேரறிஞர் திருமுறைக் கலாநிதி அரசவைக் கலைஞர் தருமபுரம் ப.சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா புரட்டாசி 20-22, வெள்ளி, சனி, ஞாயிறு, 2053 / 07, 08,09.10.2022 நல்வாழ்வு திருமண மண்டபம், இராயப்பேட்டை, சென்னை 14
ஐ.நா.தீர்மானம் – இந்தியா செய்ய வேண்டியது? – தோழர்கள் தியாகு, செந்தில்
–தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
திராவிடப்பள்ளி மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா
ஆவணி 31, 2053 வெள்ளி 16.09.2022 மாலை 6.30 முதல் இரவு 9.00 வரை முத்தமிழ்ப்பேரவை, அடையாறு, சென்னை 600 020
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 16,17 & 18: இணைய அரங்கம்
புரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் – 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 16,17 &18 : இணைய அரங்கம் “தமிழும் நானும்” உரையாளர்கள்: 3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம் கணிணி மொழியியல் ஆய்வர் 1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன் வாணி பிழை திருத்தி உருவாக்குநர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;…
சி.வை.தாமோதரனார் தமிழ்ப்பணிகள் – வாரக் கருத்தரங்கம் 4
சென்னை மாநிலக்கல்லூரி ஆவணி 28, 2053/13.09.2022 முற்பகல் 11.00
