பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!

பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!   கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலில் நூற்று ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இன அழிப்பு நிகழ்வு நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த…

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016

அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016   முடிவு நாள் : பங்குனி 17, 2048  மார்ச்சு 30, 2017 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி :  ஞானம், கிளை அலுவலகம், எண் 38, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.

புதுச்சேரி தனித்தமிழ்இயக்கத்தின் தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி

தனித்தமிழ்ச் சிறுவர்நாடகப் போட்டி தனித்தமிழ் இயக்கம் நடத்துகிறது! பரிசு உரூபா 1000.00 கடைசிநாள்: மாசி 16, 2048 /  28.2.2017 சிறுவர்கள் படித்தும் நடித்தும் மகிழ்வதற்கேற்ற 3 பக்க நாடகங்கள் 2 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உரூபா 300.00 இரண்டாம் பரிசு உரூபா 150.00 மூன்றாம் பரிசு உரூபா 100.00 ஆறுதல் பரிசுகள் உரூபா 90.00 ஐந்து பேர்களுக்கு. நெறிமுறைகள் 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழில் நாடகங்கள் இயற்றப்பட வேண்டும் 3.நாடகங்கள் மதநம்பிக்கை தவிர்த்த பகுத்தறிவு,அறிவியல் முதலிய  புதிய கருப்பொருள்களில்…

பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்

பனுவல் வரலாற்றுப் பயணம் 7 : தூசி – மாமண்டூர்   தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவருமன் காலக் குடைவரைக்கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்திரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.   இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த  இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும்…

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன்

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்!    உலகெங்கும் அவரவர் தாய்மொழியே ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49 நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில் உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது என்பதில் உண்மை இல்லை! இங்கிலாந்திலும்கூட 7 மொழிகள் கோலோச்சுகின்றன. அங்குள்ள மாநிலங்களின் தாய்மொழிகள் –  காட்டிசு(இசுகாத்துமொழி), ஐரீசு, வேலிசு, கார்னிசு, மாணக்சு, பிரெஞ்சு மொழிகளே ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகக் கோலோச்சுகின்றன. ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழி நம் நாட்டில் இந்தி போல! (படிக்க…

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.   சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு  கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….

வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.

வவுனியாவில் தை 10, 2048  திங்கள்கிழமை 23.01.2017 அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம்.  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு  முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணா நோன்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைக் குடியரசுத்தலைவர், தலைமையர்(பிரதமர்), எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு, அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை ( தை 07, 2048 / வெள்ளிக்கிழமை 20.01.2017 ) அனுப்பி வைத்துள்ளனர்.   வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் …

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’: பன்னாட்டுக் கருத்தரங்கு

    கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.      கம்பன் பிறந்த நாளை…

ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?

நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?  ஐ.நா.அவையில் அளிக்க கருத்துகளைத் தெரிவியுங்கள். வணக்கம்!  தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள். பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான  அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே  முதன்மையையும் மக்கள்  ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள்  அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.   நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக  அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது.  தமிழர்களுடைய  சிக்கல்களை நாம்  அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான தேவையினை வலுப்படுத்துகிறது.

சிறிலங்காவின் ‘நள்ளிரவு’ நீதி பன்னாட்டு நீதிபதிகளுக்கான  தேவையினை வலுப்படுத்துகிறது.   மனித உரிமை மன்றமே! வட கொரியாவைப் போல் சிறிலங்காவையும் ஐ–நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்புக!   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு நடராசா இரவிராசு அவர்களது கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிகள் அனைவரையும் கடந்த 2016 திசம்பர் 24ஆம் நாள் சிறிலங்காவின் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இரவிராசு அவர்கள் 2006 ஆம்ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் ஊர்தியில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். கொழும்பு நகர்மையப்பகுதியில் காவல்துறை – பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூப்பிடு தொலைவில் பட்டப்பகலில்கொலைகாரர்கள் அவர் வண்டியின் மீது சுட்டார்கள்.   இரவிராசு படுகொலைக்காக 2015 நவம்பர்…

குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கத்தின் மாநிலப் போட்டிகள்

  குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் நாமக்கல் : குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68- ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன. இவற்றில் கவிதை, கட்டுரை, ஓவியம்  முதலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் ‘சிந்தனைச் சிற்பி விருது 2017’, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘வரைகலைச் சுடரொளி விருது 2017’ ஆகிய விருதுகளும் சான்றிதழ்களும்…