இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 2 சுருக்கத் தலைப்புகள் இதற்கிணங்க மேற்குறித்த இருபது தலைப்புகளையும் – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம். கல்வி தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும் முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 06: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07 தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்பது பெரும்பாலும் தமிழ்மொழியையும் தமிழ்இனத்தையும் தமிழ்க்குடும்பத்தையுமே குறிக்கின்றது. ஆனால், திராவிடம் எனத் தனியாக ஒன்று இருப்பதுபோல் சிலர் வேண்டுமென்றே பரப்பிவருகின்றனர். தமிழ் என்பது இலக்கியங்களில் உள்ளதா என்றும் அறிந்தும் அறியாமலும் கேட்கின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்திலேயே தமிழ் என்பது இடம் பெற்றிருக்கிறது. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல்காப்பியம், சொல்லதிகாரம், நூற்பா 386 ) செந்தமிழ் நிலத்து…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக்…
மொழிப்போர் அறுபதாமாண்டில் வீர வணக்கம், இலக்குவனார் விருதுகள் வழங்கு விழா
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528) தமிழ்க்காப்புக் கழகம் வையைத்தமிழ்ச்சங்கம் இலக்குவனார் இலக்கிய இணையம் நாள்: ஞாயிறு தை 11, 2057 / 25.01.2026 மாலை 5.30 நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம், தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ர்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8 நிகழ்ச்சி தேநீருடன் தொடங்கி இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவுறும். மாலை 5.30 மணிக்கு 1930-1965 ஆண்டுகளில்…
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு
இலக்குவனார் விருதுகள் அறிவிப்பு தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன சங்கத்தமிழ் விருதுகளுக்கான தகுதியானவர்களைத் தெரிவு செய்துள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:- அ.) இலக்குவனார் தமிழாய்வுச் செம்மல் விருது இ.) இலக்குவனார் சங்கத்தமிழ்விருது ஈ.) இலக்குவனார் தமிழ்மணி விருது உ.) இலக்குவனார் தமிழ் இளமணி விருது ஊ,) இலக்குவனார் மொழிப்போர்ப் படைப்புக் கலைஞர் விருது 60 ஆண்டுகள் கழித்து மொழிப்போர் குறித்து வந்த முதல் திரைப் படைப்பை பராசக்தி என்னும் பெயரில் அளித்தமைக்காக எ.) இலக்குவனார் மொழிப்போர் நூற் கலைஞர் விருது…
குறட் கடலிற் சில துளிகள் 38 : நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி) நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ – 452) பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும் (பேரா.முனைவர் சி.இலக்குவனார்) பதவுரை: நிலத்து-பூமியினது; இயல்பான்-தன்மையால்; நீர்-நீர்; திரிந்து-வேறுபட்டு; அற்று ஆகும்-அத்தன்மைத்து ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; இனத்து-இனத்தினது;…
வெருளி நோய்கள் 629-633: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 624-628: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 629-633 629. கணிவிசைச் சிதைவு வெருளி- Artfdhhvhuioacedghbd78wegwbgcyghrdbuyvhbdfghcvfdcujbndfuyvcgrbefuyg4rtf5rg7uyfgvtbdfuyvjhcgbrdsuyfgqw3beufykudgsduyjcgwbeduykfgvbrhgtgjmndfgbnuykujntyettu7yjhu6y76uuyjtyphobia / Phobia of keyboard smashing இவ்வெருளியின் பெயர், பெயரிலேயே புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப் படம் போல் உள்ளது. எனினும் எளிமை கருதி ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி விசைப்பலகையில் ஏற்பட்ட சிதைவு காரணமாக எழுத்துகள் தாறுமாறாக வருவது குறித்த பேரச்சம் கணிவிசைச் சிதைவு வெருளி. 00 630. கணிணி வெருளி-Cyberphobia/Logizomechanophobia/Computerphobia கணிணி அல்லது புதிய தொழில்நுட்பம் குறித்த தேவையற்ற அச்சம் கணிணி வெருளி. ஆசிரியர்களுக்குப் புதிய…
இலக்குவனார் சங்கத் தமிழ் விருது – தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
இலக்குவனார் சங்கத் தமிழ் விருது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் சங்கத்தமிழை இணையத்தளங்கள், வலைப்பூக்கள், கட்டுரைகள், நூற்கள், சொற்பொழிவுகள், போட்டிகள், வகுப்புகள், மொழி பெயர்ப்புகள் முதலான பல வகையிலும் பரப்பும் சங்கத் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்குவனார் சங்கத் தமிழ் விருது வழங்கப் பெறும். இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி ஆகியன இணைந்து வழங்க உள்ள இவ்விருதிற்குத் தகுதியானவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். விருதிற்காகத் தொண்டாற்றவில்லை என எண்ணாமல், தகைமையாளர்கள் தங்கள் விவரங்களை அனுப்ப அன்புடன வேண்டுகிறோம். சங்கத்தமிழ்ச் செயற்பாட்டாளர்களை…
தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 5 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் இது குறித்துப் புலவர் செந்துறைமுத்து (பரிபாடல் பழக்க வழக்கங்கள்: பக். 14) பின்வருமாறு தெரிவிக்கிறார்: “தமிழ் இலக்கிய உலகு மிகவும் பழமைபட்டது; பரந்து பட்டது; பெருமைபட்டது. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் உலகு எனவும் தமிழ் கூறும் இலக்கிய உலகு எனவும் கூறலாகும். காலவரையறையைக் காண வியலாத பழமையையும் பெருமையையும் கொண்டது தமிழ் உலகு. தமிழ் உலகில் வழங்கும் நூல்களில் தொல்காப்பியம் மிகவும் பழமை வாய்ந்தது….
தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 4 முதனூல் தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்: “தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும்…
வெருளி நோய்கள் 386-390 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 381-385 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 386-390 ஈட்டி வெருளி – Dartophobia எறிந்து விளையாடப்பயன்படும் ஈட்டி(Dart) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஈட்டி வெருளி.எறியப்படும் ஈட்டி மேலே பட்டுக் காயம் ஏற்படும் அல்லது உயிருக்குப் பேரிடர் ஏற்படும் என்று பேரச்சம் கொள்ளேவார் உள்ளனர். இத்தகைய அச்சம் உடன் விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஏற்படும்.00 ஈயக் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஈயக் குவளை வெருளி.Gloindophobia என்றும் சொல்வர்.ஈயக் குவளை என்றும் ஈயக்கலன் என்றும் சொல்வர்.காலகக் கலன் வெருளி(soda cans) (stprophobia), மெனபான…
செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் நினைவரங்கம், ஒய்எம்சிஏ பட்டிமண்டபம்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு 24/223, என்.எசு.சி.போசு சாலை, சென்னை 600 001 மின் வரி : esplanade@ymcamadraas.org.on பேசி: 044-2539 6792 இடம்: ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு அரங்கம் நாள் : ஆவணி 31, தி.பி.2056 / 16.09.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 தலைமை : கவிச்சிங்கம் கண்மதியன் நினைவுரை : முனைவர் பொறி த.கு.திவாகரன் பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு உங்கள் வருகை எங்கள் உவகை! ஒளவை அருள் நடராசன் ப.தாமரைக்கண்ணன் புலவர் பு.சீ.கிருட்டிண மூர்த்தி தலைவர் செயலாளர் இணைச்செயலாளர் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் டி.ஏசாயா குமார் பா.ஆசிர் பாண்டியன்…
