நாம்
இரண்டல்ல
ஒன்றெனச் சொல்லுங்கள்.
கடற்கோள்கள் பிரித்த
தமிழாண்ட தேசங்கள்..
அடிமை தேசங்களாய்...
அவனியில் இன்று..
ஆயினும்
உணர்வழியா இனமாய்..
ஒன்றெனச் சொல்லுங்கள்.
உரத்துச் சொல்லுங்கள்..
எங்கள் இனம்
இன்று
ஒன்றானதென்று!
இல்லை என
பார்ப்பவர்கள்
பகைவர்கள்!
.
பிரித்துப்
பார்ப்பவர்கள்
பித்தர்கள்...!!
ஒன்றான மாந்தர்
ஒன்றுபட்ட இனம்..
ஒற்றை தாய் மொழி..
கடல் பிரித்த
தேசங்கள்..
இரண்டானாலும்
தமிழினம் என்றும்...
ஒரு குடி காண்!
ஒற்றுமை
ஒன்றே
உயர்வெனக் கொண்ட
வேற்றுமை இல்லா
தமிழர் நாம்!..
ஒன்றே எம் இலக்கு.
விடுதலை எம் கிழக்கு
உரத்துச் சொல்வோம்
உலகுக்கு!.
கோடி சோடி
விழிகளும்
காணும் காட்சி
ஒன்றெனச் சொல்!
துண்டாக்கும்
பகைகள்
எலும்புத் துண்டிற்காய்..
சில குறைகள்...
இனத்தை இரண்டாக்க
குரைக்கின்ற
இரண்டகர்கள்!
இழிந்த மொழியில்
இளித்துச் சொல்வார்..
நாம் இரண்டு என்றும்..
துண்டு துண்டானோம் என்றும்..
எச்சில் இலைக்காய்
பிச்சைக்காய்
பிதற்றல்கள்
தூக்கி ...