அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருவிழா
ஆடிப் பூரத் திருவிழா ஆடிப் பூரத்திருவிழா புசசல்லாவை வாடித்துரை தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. அம்மனின் திருவுருவம் உள்வீதி வலம் வந்தது. இவ் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் இலங்கைத் தொழிலாளர் பேராய(காங்கிரசு) துணைத்தலைவரும் முன்னாள் பகுதிஅவை சபை உறுப்பினருமான எம்.எசு.எசு.செல்லமுத்து கலந்து சிறப்பித்தார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா
முத்தேர்த் திருவிழா நுவரெலியா ஆவேலியா அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30 மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது. ஊர்வலத்தில் கலை பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின் செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால் சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம், ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
