தமிழ்த்தேசியப்போராளி இலெனின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல்

பங்குனி 16,  2047 / மார்ச்சு 29, 2016   மாலை 5.00  பெண்ணாடம் ‘தோழர் இலெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும்’  நூல் வெளியீடு   தலைவர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்நாடு விடுதலைப் படையைக் கட்டியெழுப்பி தமிழ்த்தேச விடுதலைப் போராட்டக்களத்தில் இன்னுயிர் ஈந்த தோழர் இலெனினுக்கு செவ்வணக்கத்தை உரித்தாக்குவோம்! பங்குனி 16 – மார்ச்சு 29 அவரது நினைவுநாளில் ஒன்றுகூடுவோம்! தமிழ்த்தேச மக்கள் கட்சி கடலூர்

இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்

  மரித்துப்போனதா மானுடம் ? சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை ! ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ? தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள்…