இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 3 – தொடர்ச்சி திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும்  நிறைவுரை 4 தமிழ்வழிப் பயில்வோருக்கு முதலுரிமை   செல்வர்களுக்கான கல்வியகங்கள், ஏழை எளியோருக்கான  கல்வியகங்கள் என்ற பாகுபாடுநீக்கப்பட சமச்சீர்க்கல்வியுடனான அருகமைப்பள்ளிகள் இருக்க வேண்டும். இதுதான் உண்மையான சமத்துவமாகத் திகழும். நாட்டின் வளர்ச்சியும் தளர்ச்சியும் வகுப்பறைகளில் உருவாக்கப்படுவதை உணர்ந்து  சமஉடைமையைக் கல்வியகங்களில் தோற்றுவிக்க வேண்டும். இவ்வாறெல்லாம் கல்வியாளர்கள் கவலையுடன் எதிர்கால நல்வாழ்வு கருதி நிகழ்காலச் செயல்பாடுகளுக்கு  வழி காட்டும் வேளையில்…