நச்சு உண்ணிக்கடியால் பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள்

மேற்குமலைத்தொடர்ச்சியில் காட்டெருமையின் நச்சு உண்ணிக்கடியால் பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள் மேற்குமலைத்தொடர்ச்சி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நச்சு உண்ணிக்கடியால் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அல்லல்படுகின்றனர். இவற்றைத்தவிர அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏறக்குறைய 2 கோடி மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இம்மலைவாழ் மக்கள் அப்பகுதியில் வேளாண் நிலங்களை உருவாக்கி, காழ்ச்செடி(காப்பி), தேயிலை, வாழைக்காய், சீமைஅவரை(பீன்சு), உருளைக்கிழங்கு, செங்கிழங்கு(பீட்ரூட்டு), தோடம்பழம்(ஆரஞ்சு), தேங்கனி (கோகோ), மிளகு, ஏலம், கிராம்பு போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு…

தலைவாசல் கல்லைப் பாதுகாக்கும் மலைவாழ்மக்கள்

  தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பவை கல்வெட்டுகளே. பண்டைய தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு இக்கல்வெட்டுகளே துணை புரிகின்றன. வரலாற்றின் பல்வேறு காலக் கட்டங்களின் நிலையைக் காட்டும் காலத்தின் கண்ணாடிகளாக இவை துணை புரிகின்றன. ஒரு வீட்டிற்கு எப்படி வாசல்படி முதன்மையோ அது போல மலைப்பகுதி ஊர்களில் தலைவாசல் கல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மலைப் பகுதி ஊரிலும் நான்கு தலைவாசல் கல்கள் உள்ளன. ஒன்று நுழைவு வாயிலாகவும் மற்றொன்று இறப்பு போன்ற நிகழ்வுகள் நடந்தால்…