வெருளி நோய்கள் 1216 -1220 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1211-1215 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1216 -1220 பிறரால் தனித்து விடப்பட்டதாகக் கருதும் அளவுகடந்த பேரச்சம் தனியை வெருளி(Ermitophobia).பிறரிடமிருந்து ஒதுக்கப்பட்டு வாழ்வதால் உதவுவார் இல்லை என அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்..இவ்வாறு பலவகையாகத் தனிமை தொடர்பான வெருளிகள் சொல்லப்பட்டாலும் அடிப்படையில் யாவும் ஒன்றே. திருமண வாழ்க்கையின்றித் தனித்து இருப்பதும் குடும்ப வாழ்க்கைக்குப் பின்னரும் பிறருடன் ஒன்றாமல் ஒன்றியாய் இருப்பதும் சிலர் இயல்பு. தனிமையில் இருக்கும் பொழுது துன்புறுத்தும் சிந்தனைகள் குவிந்து வாட்டும். தனித்த சூழல் கவலைகளைப் பெருக்கும். செயல்பாட்டுத் தடைகளும் ஏற்படும்….
