க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள்
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் தொடர்ச்சி) க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் (முதல் பரிசு பெற்ற கட்டுரை) முன்னுரை கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் முதல், இடை, கடை என்ற முத்தமிழ்க் கழகங்கள் நிறுவி தமிழ் ஆய்ந்தனர், தமிழ் அரசர்களான பண்டையர் (பாண்டியர்). தமிழ் தோன்றிய காலம் வரையறுத்துக் கூறற்கரிதாயுள்ளது. ‘இலமூரியா’க் கண்டம் என்ற குமரிக்கண்டம் ஐந்துமுறை கடலால் கொள்ளப்பட்டது. இந்துமாக்கடல் பரப்பில் இப்பொழுது காணப்படும் சிறு…
எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்
(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும்…
௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார்
(ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௬. புலமையார்: அன்றும் இன்றும் ‘புலம்’ என்றால், ‘அறிவு’ எனப்பொருள். அது பல்துறை அறிவையும் குறிக்கும். ஆனால் ஈண்டு யாம் எடுத்துக் கொண்டது தமிழ்ப் புலமை பற்றியதேயாம்.பண்டு தமிழ்ப் புலமை தமிழறிவைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே பெறப்பட்டது. பிறமொழிக் கலப்பே தமிழில் உண்டாகாத காலம் அது. தமிழ்ப் புலமையாளரும் அன்று மிகக் குறைவு. இன்று போல் அச்சிட்ட நூல்கள் அன்று இல்லை. எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளே இருந்தன. ஓர்…
ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார்
(௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் ‘தமிழில் என்ன இருக்கிறது?’ – இந்த வினா தந்தை பெரியாரவர்களால் எழுப்பப்பட்டது. அது மட்டுமா? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்பதும் அவரது கூற்றாகும் “இவற்றைச் சொன்னதன் உட்பொருள் யாது?” என்பதே ஈண்டு ஆராயற்பாலது. பெரியாரவர்கள், தமிழின் மீதுள்ள வெறுப்பினால் இவ்வாறு கூறினார்களா? என்றால் இல்லை! இன்றுள்ள தமிழ்நூல்கள் யாவும் – திருக்குறள் உட்பட – மக்கள் பின்பற்றவேண்டிய அறநெறிகளையும், வாழ்க்கை முறைகளையும், போர்…
௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? – திருத்துறைக்கிழார்
(௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா? கற்பனையில் உண்டான கல்லுருவங்களைக் கடவுள் என்று வணங்கலாமா? அவற்றின் முன் படையலிட்டும், பலியிட்டும், பாலாலும், பன்னீராலும், தேனாலும், சருக்கரையாலும் அக்கற்களை முழுக்காட்டி ஆடை சுற்றி, அணிகலன்பூட்டி, பூச் சார்த்திப் பொட்டிட்டு, மண்டியிட்டு விழுந்து கும்பிடலாமா? உன்னால் செய்ய முடியாத செயல்களை அக்கற்கள் எங்ஙனம் செய்ய முடியும்? அவை பிறர்துணையின்றி அசைய மாட்டா. வைத்த இடத்தைவிட்டு நகர முடியுமா? உனக்கு நன்மையோ…
௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார்
(உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? கடல் கொண்ட குமரிக் கண்டம் தொட்டு வடபால் எல்லையாம் பனிமலை வரை தமிழர் பரவி வாழ்ந்ததாகப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகிறது. உலகுக்கு நாகரிகம் உணர்த்திய பெருமை தமிழர்க்கே உரியது! தமிழ்மொழி ஒன்றே உலகப் பொதுமொழியாக இருக்கக்கூடிய தகுதி பெற்றது என்கிறோம்.திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றே உலக ஒழுக்க நூலாக இருக்கும் தகுதி வாய்ந்தது என்கிறோம். ஆனால், தமிழர்தம் ஆண்டுக்கணக்கு, தமிழ்க்கணக்குகள் தமிழ்ப்பகைவர்களால்…
உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார்
(க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் உ.தமிழர் திருமணமுறை தொல் பழந்தமிழர் திருமணமுறை தமிழர்கட்கு இன்று புதுமையாகத் தோன்றுகின்றது. ஏன்? ஆரியர் தமிழகம் போந்து விளைத்த சீர்கேடுகளுள் இஃது ஒன்று! தமிழர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியன கெட்டு யாவும் ஆரியமயமாகிவிட்டமையை எத்துணைத் தமிழர் அறிவர்? ஆகவே, பண்டைத் தமிழர் திருமண முறை பற்றி இன்று பேசினால் இற்றைத் தமிழர் ஏற்க மறுக்கின்றனர். ஆரிய முறை அத்துணை ஆழமாகத் தமிழரிடையே வேரூன்றிவிட்டது. பெரியார் ஈ.வெ.ராவும்…
க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்
(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர்க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும்,…
திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?
(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்க௪. தமிழுக்குச் சிறை? இன்று வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் சொற்கள் தமிழ்ச்சொற்களா? வேற்றுமொழிச் சொற்களா? எனத் தெரியாது. ஏனெனில், இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆரியம் புகுந்து, தன் மொழி சமற்கிருதத்தைத் தமிழுடன் கலந்து எழுதி, தமிழும், வடமொழியும் (சமற்கிருதம்) கடவுளின் (சிவனின்) இருவிழிகள் என்றும் சமற்கிருதம் “தேவபாசை” என்றும் கதைகட்டி விட்டனர். இதுகொண்டு தமிழ்மக்கள் மயங்கி தமிழ்ச் சொற்களை விட்டு வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலக்கத்…
திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?
(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் க௩. தமிழ் வாழுமா? வளருமா? க. தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை! உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை! ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில் இல்லை! ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக எழுதப்பெறவில்லை. ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம் கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ,…
ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும். தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும். ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர். பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர். தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர். ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க்…
தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்
(சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை முன்னுரையும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ் க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கை இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், லட்சியம், லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர். தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை, வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர். ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர்,…