இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல்.

இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது கட்டுரை சாதனையாளர் சரிதை

ஆறாவது கட்டுரை ஆறு சிலேட்டுகள்  ஆறு சேலைகள்; ஏழாவது கட்டுரை மருமகளின் மறுபார்வையில்; எட்டாவது கட்டுரை திராவிடத் தீர்மானங்கள்; ஒன்பதாம் கட்டுரை இராமச்சந்திரனார் பேசுகிறார்; பத்தாவது கட்டுரை எப்படித் தோன்றினார் இராமச்சந்திரனார்;

பதினொன்றாவது கட்டுரை மாவீரர் கண்ட மாநாடுகள்; பன்னிரண்டாம் கட்டுரை கொள்கை அரசர் கணட குடியரசு; பதின்மூன்றாவது கட்டுரை வகுப்புரிமை பற்றி வ.உ.சியார்; பதினான்காவது கட்டுரை சிவகங்கைச் சூரியனின் தொலைநோக்கு; பதினைந்தாம் கட்டுரை தலைமுறைத் தலைவர்கள்;

பதினாறாம் கட்டுரை பெரியாரின் உறவினர்; பதினேழாம் கட்டுரை புத்தரும் புனிதரும்; பதினெட்டாம் கட்டுரை அண்ணாவின் வைர விழுது; பத்தொன்பதாம் கட்டுரை கலைஞர் போற்றிய இனக்காவலர்; இருபதாம் கட்டுரை இராமச்சந்திரன் முதல் இராமச்சந்திரன் வரை;

21 ஆவது  கட்டுரை புரட்சித்தலைவியின் புகழுரை; 22 ஆவது  கட்டுரை  பேராசிரியர் போற்றுகிறார்; 23 ஆவது  கட்டுரை  மதுரை முத்துவின் மனத்தலைவர்; 24 ஆவது  கட்டுரை  தளபதிகளின் தலைவர்; 25  ஆவது  கட்டுரை அன்பிலின் அன்பிற்குரியவர்; 26 ஆவது  கட்டுரை  நாவலர் போற்றிய நல்லவர்; 27 ஆவது  கட்டுரை  இலட்சியம் முழங்கியது; 28 ஆவது  கட்டுரை  புதையலில் பூத்தது; 29  ஆவது  கட்டுரை சீவாவின் சீவன்; 30  ஆவது  கட்டுரை அறிஞர்கள் பேசுகிறார்கள்

; 31  ஆவது  கட்டுரை  இராமச்சந்திரன் மகன் இராமச்சந்திரன்; 32 ஆவது  கட்டுரை   தாழ்த்தப்பட முடியாத தன்மான வீரர்; 33 ஆவது  கட்டுரை  பதவிகளா? போராட்டங்களா?; 34 ஆவது  கட்டுரை  தமிழும் இராமச்சந்தினாரும்; 35  ஆவது  கட்டுரை இராமச்சந்திரனார் இறந்திருக்க வேண்டுமா?;

36   குடிகளும் அழுதனர் குடியரசும் அழுதது; 37 ஆவது  கட்டுரை   ஒரு சிந்தனையாளரின் மாணவர்கள்; 38 ஆவது  கட்டுரை  ஒரு நூற்றாண்டை மட்டும் ஓரங்கட்டலாமா?; 39 ஆவது  கட்டுரை   நினைவு இல்லம் வேண்டும்; 40  ஆவது  கட்டுரை மனித நேய உயரம் தொட்டவர்;

41 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் எனும் போராளி; 42 ஆவது  கட்டுரை   ஏன் எழுதினேன்?; 43 ஆவது  கட்டுரை  இராமச்சந்திரனார் மரபு;

2005 இல் முதற்பதிப்பாக வெளிந்துள்ள  இந்நூலில், கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், ஆசிரியர் கி.வீரமணி, வைகோ, காவல்துறைத்தலைவர் தி.இராதாகிருடடிணன், வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன், வழக்குரைஞர் இந்திரசித்து ஆகியோரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

இந்நூலில் ஆங்காங்கே சிவகங்கை இராமச்சந்தினாரின் கருத்துகளையும் பிறர் அவரைப்பற்றிக் கூறிய கருத்துகளையும் தந்துள்ளார். முதல் கட்டுரையான சூரிய வனத்தில் பேரறிஞர் அண்ணா இவர்பற்றிக் கூறியதைப் பின்வருமாறு தந்துள்ளார்.

“தோழர் இராமச்சந்திரன் எனது வலது கரம். என்று தந்தை பெரியாரும் சுயமரியாதைத் தீபம் ஏந்தும் படையின் தளபதி எனத் தொண்டர்களும் இவரைப்போற்றி வந்தனர்.”

மாமன்னரின் வழி முறையினரான பெரிய கருப்பன் அவர்களின் புதல்வர் மானங்காத்த சுப்பிரமணியன். சிவகங்கை அரசில் காப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், ஒரு சமயம் அரசன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்த போது அரண்மனைக் காவலுக்கு யாருமில்லாத நிலை இருந்தது. அப்போது, பகைவர்கள் தாக்க வந்தனர். சுப்பிரமணியம் ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும விரட்டி அடித்தார் அதனால் மானங்காத்த சுப்பிரமணியம் என்ற அழைக்கப் பெற்றார்.  அரசரும் இவருக்கு ஆத்திக்காடு தெக்கூரைச் சுற்றியுள்ள நிலத்தில் நான்கில் ஒரு பகுதியைப் பரிசாக அளித்தார்.

ஒரு சமயம் இவர் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, புலி ஒன்று இவரைத் தா்கியது. அதனால் குடல் சரிந்து விழுந்தார்.இருந்தும் மனநிலை தளராமல்,ஒரு கையால் குடலை வயிற்றில் தள்ளிக் கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் வேலெடுத்துப் புல்யைக் குத்திக் கொன்றார். இப்பெரு வீரத்தால் இவரைப் புலி குத்திய சுப்பிரமணியம் என்று அனைவரும் அழைத்தனர். அவரின் வழித்தோன்றலே இராமச்சந்திரன்.

சிவகங்கைச் சூரியன், சிவகங்கைச் சிங்கம், சுயமரியாதைச் சிங்கம், சுயமரியாதைச் சுடரொளி, சேர்வையார் என்று பலவாறாக மக்களால் அழைக்கப்பெறுபவர் இராமச்சந்திரனார் என ‘வரலாற்றின் வரலாறு’ என்னும் மூன்றாவது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் இவர் ஆற்றிய தலைமையுரையை வழங்கியுள்ளார். ‘வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்’ என்னும் நான்காம் கட்டுரையில் இவரின் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத் தேவத்தானக் குழுவின் தலைவராக இருந்த இவர் 08.08.1930 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,

அனைவருக்கும் ஆலய நுழைவுரிமை

தேவதாசிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியங்களையும் நிறுத்துதுல்

குளம், பள்ளி, சாலை ஆகியவற்றில் சாதியின் பெயரால்  தடை செய்யாமை

முதலிய தீர்மானங்களை நிறை வேற்றிச் செயற்படுத்தினார்.

அப்பொழுது. ஒதுக்கப்பட்ட நாடார் குலத்தைச் சேர்ந்த சு.ஆ.முத்துநாடார் என்பவரை உறுப்பினராக்கப் பரிந்துரைத்தார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இன்மையால் இயலாது போயிற்று. உடன் விருதுநர் பெ.சி.சிதம்பர நாடார் என்பவரை உறுப்பினராக்கினார். இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கப்பட்டவர்களையும் கோயிலுக்குள் உரிமையுடன் நுழையச் செய்த செபருமைக்குரி்யவர் இராமச்சந்திரனார் என்பதை விளக்கியுள்ளார்.