தோழமைக் கட்சியினர் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!
இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதையும் பேசக்கூடாது!
தமிழே விழி! தமிழா விழி!
அன்பு கெழுமிய அனைவருக்கும் வணக்கம்.
தோழமைக்கட்சியினர் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக் கூடாது என்ற பொதுநலத்திற்காகவோ பதவியை எதிர்நோக்கிய தன்னலத்திற்காகவோ த.வெ.க.வினை ஆதரித்துள்ளனர். ஆனால், அதனைத் தீண்டத்தகாத கட்சிபோல் கருதி அவ்வப்பொழுது பொன்மொழி உதிர்க்கின்றனர். ஒருவரைக் காதலித்து விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட பின் முந்தைய காதல் தொடருவதாகக் கூறுவது பரத்தமை – விபச்சாரத்திற்கு ஒப்பாகும். ஒருவரிடம் நட்பு கொண்ட பின் மீண்டும் ஆராய்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் திருவள்ளுவர். அவரே நட்பு கொண்டபின் நண்பர் கருத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அவ்வாறில்லாமல் மறுதலையாகப் பேசும் தோழமைக்கட்சியினர் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது கூட்டணியை விட்டு வெளியேறவேண்டும். இவர்கள் இல்லாமலேயே முதல்வர் ச.சோ.விசய் ஆட்சியை நிலையாக நடத்துவார். எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! உழுவலன்பின் இலக்குவனார் திருவள்ளுவன்





Leave a Reply