(தமிழ்ச்சொல்லாக்கம்: 321- 324 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 325-332

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

325. விவாகவேசம் – மணக்கோலம்

குறமடந்தை – குறச்சிறுமி, (வள்ளி நாயகி) மணக்கோலம் – – விவாகவேசம், மணக்கோலமானவன் செங்கீரை யாடியருள் எனவும், தெய்வங்கள் மணவாளன் செங்கீரை யாடியருள் எனவும் முடித்துக் கொள்க.

நூல்      :           முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் (1914), பக்கம் – 26

உரையாசிரியர்  :           காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு

326. விதூசகன் —        கோமாளி, கோணங்கி

327. உரோகணி           —        உருளி

328. தேசோமயம்        —        பேரொளி

329. பரிபாகம் —        ஏற்ற பக்குவம்

330. அஞ்சுகம் —        அழகிய கிளி

331. அபரஞ்சி —        புடமிட்ட பொன்

332. கருடன்    —        பறவைக்கரசு

நூல்      :           சதகத்திரட்டு (1914) சென்னைமதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்