(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 63/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

64/69

 (போற்றுதல்களும் தூற்றுதல்களும் : திறனாய்வுக் கட்டுரைகள்) Celebrations and Detractions : Essays in Criticism (Reliance Publishing House, New Delhi, 1993)

இந்நூலில் பின்வரும் பதினைந்து ஆங்கிலத் திறனாய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன:

1.) இலக்கியமும் தத்துவமும், 2)ஆதாரன் (Hawthorne) என்னும் அமெரிக்கரின் புதினம் (The Scarlet Letter), 3) The House of the Seven Gables என்னும் புதினத்தில் சேக்குசுபியரின் செல்வாக்கு, 4) புனைவியலும் வரலாறும், 5) மேத்தியூ அருனாலுடும் புனைவியல் கவிதையும், 6) உரைகல் அணுகுமுறை எனும் இலக்கியத் திறனாய்வு, 7) புனைவியல் காலத்தில் சேக்குசுபியர் நாடகங்கள்பற்றிய திறனாய்வு, 8) உரைகல் திறனாய்வும் மேத்தியூ அருனாலுடும், 9)எசுரா பவுண்டின் கவிதைகளில் வட்டிக்குக் கடன் தரல் எனும் பாடுபொருள், 10) எசுரா பவுண்டின் காட்சியுருக் கோட்பாடுகள், 11)ஏட்சு(W.B.Yeats)பற்றிய ஆங்கிலக் கவிதைகள்,12), டி.எசு.எலியட்டு எழுதிய The Cocktail Party எனும் நாடகம், 13) டி.எசு.எலியட்டின் கவிதையும் நாடகங்களும், 14)இலெசிலி ஃபீல்டரின் இலக்கியக்கோட்பாடு, 15)சவகர்லால் நேருவி்ன் மாந்தநேயம்.

பழந்தமிழ்க்கவிதையும் கவிதையியலும்: புதிய பார்வைகள் (Ancient Tamil Poetry and Poetics: New Perspectives (CICT 2010)

21 தலைப்புகளில்  பிறமொழி இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பழந்தமிழ்ச்சிறப்புகளை உணர்த்தியுள்ளார். அத் தலைப்புகள் பின்வரும் பொருண்மைகள் கொண்டனவாகும்:-

1.கிரேக்கம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் பேசப்படும் கவிதையியல்.

2.மறைமுகக் கவிதை : தமிழ் மரபு

3.கவிதை வடிவங்கள், பாடுபொருள்கள், உத்திகள் ஆகியவற்றின் சேமிப்புப் பேழையாகப் புறநானூறு

  1. புறநானூறு ஒரு வீரயுக இலக்கியமா?
  2. பரணரின் பாடல் :புது வரலாற்றிய நோக்கில்

6.குறுந்தொகையின் முதற்பாடல்: சிதைவாக்கத் திறனாய்வு அணுகுமுறையில்

7.கலையும் காமநூலும் : அகநானூற்றுப் பாடலின் படுக்கையறைக் காட்சி

8.முல்லைப்பாட்டு : முல்லையா? நெய்தலா?

9.குறிஞ்சிப்பாட்டு : களவு மணமும் கந்தர்வ விவாகமும்

10.இந்தியக் காப்பியத்தின் தோற்றம் : குமாரசம்பவமும் சங்கச் சான்றோர் பாடல்களும்

11.பரிபாடலின் காலம்

12.விலங்குகளின் மாந்த உணர்வுகள்: தொல்காப்பியத்திலும் சங்கப்பாடல்களிலும்

13.வாழ்க்கையின் நோக்கமும் பயனும்:திருவள்ளுவரும் பிளேட்டோவும்

14.நட்பைப்பற்றி வள்ளுவரும் அரிசுட்டாட்டிலும்

15.பழமொழி நானூறு: வாழ்க்கைக்கு வழிகாட்டியாகப் பழமொழிகள்

16.சிலப்பதிகாரத்திலும் ஆந்திகொனியிலும் ஊழ்

17.சிலப்பதிகாரம்: பத்தின் என்ற உருசிய திறனாய்வாளரின் அணுகுமுறையில்

18.மணிமேகலையில் புத்த சமயம்

19.ஏ.கே.இராமானுசனின் ஆங்கிலக் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு

20.புறநானூற்றை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்கள்

21.திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் : எல்லீசர் முதல் சுந்தரம் வரை.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 65/69)

திறனாய்வுச்செம்மல், ப. மருதநாயகம், தமிழ் ஆய்வின் விடிவெள்ளி, Ilakkuvanar Thiruvalluvan, Prof.P.Maruthanayakam,,