புற்றுநோய்வெருளி

புற்றுநோய்வெருளி

 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

 

புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1)

செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10)

புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2)

நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2)

பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277)

புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல், பயிரியல், பொறியியல்நுட்பவியல், சூழறிவியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடைஅறிவியல் ஆகியவற்றில் cancer-புற்று நோய் எனப் பயன்படுத்தி வருகின்றனர்.

புற்றுநோய் (வரும் என்பது) குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

இலக்குவனார் திருவள்ளுவன்