சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம் சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 21-40 (தொடரும்) உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 231. absolute right முழு உரிமை முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது. எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது. அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது. 232. absolute title முழுமை உரிமைமூலம் முழுவுரிமை மூலம் முழு உரிமை ஆவணம் முழு உரிமை யாவணம் முழுமையான நிறைவான உரிமையுடைமை….
உ.வே.சா. வின் என் சரித்திரம் 51: மகா வைத்தியநாதையர்
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 50: கலைமகள் திருக்கோயில் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-50மகா வைத்தியநாதையர் ஒவ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போகமற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள்வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும்கடிதங்களையும் எழுதுவேன். தேசிகர் பாடம் சொல்லுதல் அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப்பாடம் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்கவிருப்பம் உண்டு. அதனையும், திருக்கோவையார் இலக்கண விளக்கம் என்னும்நூல்களையும் யாருக்கேனும் பாடம் சொல்லுவார். தேசிகர் இலக்கணச்செய்திகளை வரையறையாகச் சொல்வதும்,…
மலர்க்கொடிஅன்னையின் மலரடிபோற்றி!
மலர்க்கொடி அன்னையின் மலரடி போற்றி! யார்அர செனினும் தமிழ்க்குக் கேடெனில் போர்முர சார்த்த வீறுடை மறவர் இலக்குவனாரின் இனிய துணையாய் செருக்களம் நோக்கிச் செல்கென விடுத்த தருக்குடை மறத்தி;தமிழ்நலன் காக்கும் விருப்புடன் துணைவர் சிறைக்களம் புகினும் பொறுப்புடன் மக்கள் சுற்றம் காத்திடும் பெருந்துணை நல்லாள்; இல்லம் ஏகிய மறைமலை அடிகளும் திருக்குறளாரும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்களும் வள்ளுவர் காட்டிய வாழ்க்கைத் துணையாய் விருந்து பேணிடும் குறள்நெறிச் செம்மல் என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்; கலக்கம் நீக்கிக் கனிவைப் பொழிந்து இலக்குவர் போற்றிய இனிய…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 9 : ஓரியின் புகழ்-தொடர்ச்சி) தமிழர் வீரம் உக்கிர பாண்டியன் வேங்கை மார்பன் மறப்படை வீரன்; படைச் செருக்கால் பாண்டிய மன்னனையும் மதியாது இறுமாந்திருந்தான். அந்நாளில் மதுரையில் அரசு வீற்றிருந்த பாண்டியன் ஒரு பெரு வீரன். சோழ மன்னனும் சேரமானும் அவனுடைய சிறந்த நண்பர்கள். தமிழறிஞர்கள் அவனைச் சுற்றமெனச் சூழ்ந்திருந்தாரக்ள். இவ்விதம் பல்லாற்றானும் புகழ்பெற்று விளங்கிய பாண்டியன் பகைவர்க்கு மிகக் கொடியவன். அவரைக் கண்ணின்றி ஒறுப்பவன்; ஆதலால் உக்கிரப் பெருவழுதி என்று பெயர் பெற்றான். உக்கிரனும் வேங்கையும் வழுதிக்கும்…
வள்ளுவர் சொல்லமுதம் 14 : அ. க. நவநீத கிருட்டிணன் : நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை
(வள்ளுவர் சொல்லமுதம் 13 : அ. க. நவநீத கிருட்டிணன் : கூ. அறிவும் ஒமுக்கமும்- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை. நன்றி கொன்ற மகனுக்குக் கழுவாயே இல்லை. அத்துணைப் பெரிய கொடிய பாவம் நன்றி மறத்தல் என்று வள்ளுவர் வன்மையாகக் கூறுவார். ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது அவர்தம் மறைமொழி. ஒருவன் செய்த நன்றி ஒன்றனை நினைந்தபோது, அவன் கொன்றாலன்ன இன்னலைப் பின்னொருகால் கொடுப்பினும் அது மறந்துபோம். அந் நன்றி உணர்ச்சி நடுவுநிலைமையினின்று…
சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 226. absolute privilege வரையிலாச் சிறப்புரிமை நிபந்தனையற்ற சிறப்புரிமை அல்லது சலுகை உரிமை. இது நிபந்தனையுள்ள சிறப்புரிமை அல்லது சலுகை உரிமையினின்றும் வேறுபட்டது. 227. absolute property முழுச் சொத்துரிமை இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்னரோ, பின்னரோ, எய்தியிருந்த உடைமைக்கு வரையறுக்கப்பட்ட உரிமையாளராக இல்லாமல், முழு உரிமையாளராவார். (இந்து மரபுரிமையர் சட்டம், 1956, பிரிவு 14(1) ) 228. absolute responsibility…
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன்
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை. பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது….
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் -தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி தெளிதல் நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் 45சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள்;சிந்தனைத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள்வந்து மறைந்தன; தந்தையின் நினைவும்நொந்தஅவ் வுளத்தில் நுழைந்தது; ஐயகோ!மொழிக்குறும் பகைமை முதுகிடப் பொருதனை! 50இழுக்குறும் அடிமை இரிந்திட உழைத்தனை!வழுக்களைந் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனை!ஆயினும் அந்தோ அறிவிலார் கூடி,நாயினும் கீழோர் நயவஞ் சகரால்கொன்றனர் நின்னைக் கொடுமை! கொடுமை! 55என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத்துயரம் புனலாய்த் துணைவிழி வழியாஉயிரொடு வெளிவரல் ஒப்ப வழிந்தது;…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம் சொற்கள் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 1. மன்னார் கோயிற் புராணம் 1855 மகாவித்துவான் கோவிந்தபிள்ளை 2. அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம் 1857 பூதாமசு லுண்டு, 3. இலக்கணச் சுருக்கம் – மழவை. மகாலிங்க ஐயர் 1861 4. சிவதருமோத்தரம் மூலமும் உரையும் பூமறைஞான சம்பந்த நாயனார் உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள் 5. இந்து கைமை…
சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 221. absolute owner முழுச் சொந்தக்காரன் ; தனி உரிமையாளர் முழுச்சொத்துரிமையர் முழு உரிமையாளர். தளவாடங்கள், கட்டடங்கள், நிலம், ஊர்திகள் போன்ற சொத்துகளின் ஒரே உரிமையாளர். வில்லங்கத்திற்கோ பிணைப்பொறுப்பிற்கோ உட்பட்டிருந்த போதிலும் சொத்தின் முழு உரிமையையும் மாற்றி வழங்கும் தகுதியுடையவர். 222. Absolute owners of all property . அனைத்துச் சொத்து முழு உரிமையாளர்கள் ஒன்றின்மீதான அனைத்து…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : கலைமகள் திருக்கோயில்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அபய வார்த்தை – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 49 கலைமகள் திருக்கோயில் மாயூரத்தில் வசந்தோற்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர்திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன்பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படிமடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன. தேசிகரின் பொழுது போக்கு சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும்வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாசணை செய்வது,மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச்செய்வது ஆகிய விசயங்களிலே பெரும்பாலும் பொழுதைப் போக்கி வந்தார்….