வெருளி நோய்கள் 704 -708 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 699-703: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 704 -708 704. கழுதை வெருளி-Gaidouriphobia கழுதை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதை வெருளி. கழுதை உதைத்து வீழ்த்தி விடும் என்று தேவையின்றிப் பேரச்சம் கொள்கின்றனர். Gaidouri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழுதை. 00 705. கழுதைக் குரங்கன் வெருளி – Donkeykongphobia காணாட்டங்களில் இடம்பெறும் புனைவுரு கழுதையான  கழுதைக் குரங்கன் (Donkeykong) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கழுதைக் குரங்கன் வெருளி. 00 706. கழுதைப்புலி வெருளி – Yainaphobia கழுதைப்புலிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 1021. Auxiliary force        துணைப்படை துணைப் படையினர் என்பது படைத்துறை அல்லது காவல்துறைக்கு உதவும் துணைப் பணியாளர்கள். ஆனால் வழக்கமான படைகளிலிருந்து மாறுபட்டு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். துணைப் படையினர் என்பது ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அல்லது கோட்டைக் காவற்படை  போன்ற சில கடமைகளைச் செய்யும் படைசார் தன்னார்வலர்களாக இருக்கலாம். ஒரு துணைப் படை வழக்கமான வீரர்களைப் போலவே பயிற்சி அல்லது தரவரிசை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அஃது ஒரு…

வெருளி நோய்கள் 699-703: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 694-698: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 699-703 699. கழித்தல் வெருளி – Subtractionphobia கழித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கழித்தல் வெருளி. கணக்கு வெருளி உள்ளவர்களுக்குக் கழித்தல் வெருளியும் வருகிறது. கடன்வாங்கிக் கழித்தல் முதலான கணக்கு புரியாமல் கழித்தல் கண்டு அஞ்சுகின்றனர். எனவே, கழித்தல் என்றாலே தேவையற்ற காரணமற்ற அளவுகடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர். 00  700. கழிவறை வெருளி –  Toualetaphobia   கழிவறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கழிவறை வெருளி. தூய்மையின்மை, நாற்றம், நோய்த்தொற்று குறித்த கவலை போன்றவற்றால் கழிவறைபற்றிய அளவுகடந்த தேவையற்ற…

தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! – இலக்குவனார்திருவள்ளுவன்

இலக்கியம் – நூல் அறிமுகம் நவம்பர் 17, 2025 தாய் / thaaii.com நவம்பர் 17: தமிழ்ப் போராளி இலக்குவனாரின் 116 ஆவது அகவை நிறைவு நாள். தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்! பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’. இலக்குவனார் பள்ளி மாணாக்கராக இருந்த பொழுதே கவிஞர், சொற்பொழிவாளர், மொழி பெயர்ப்பாளர் என விளங்கினார். புலவர் மாணாக்கராக இருந்த பொழுது கட்டுரையாளர், நூலாசிரியர், தனித் தமிழ்ப்பரப்புநர், தமிழாசிரியர்…

குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 33 : இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 34 கடிந்துரைப்போரைத் துணையாகக் கொள்ளாதவன் தானே அழிவான் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448) தவறுகின்ற நேரங்களில் கடிந்துரைப்பார் இல்லாத பாதுகாப்பற்ற அ்ரசன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடுவான். இடித்தல் என்பதற்கு முழங்குதல், இடியிடித்தல், நோதல், தாக்கிப்படுதல், மோதுதல், கோபித்தல், தூளாக்குதல், தகர்த்தல், நசுக்குதல், தாக்குதல், முட்டுதல், கழறிச்சொல்லுதல்,…

வெருளி நோய்கள் 694-698: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 689-693 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 694-698 694. கவர்மகர வெருளி – Zestorhodophobia கவர்மகர நிறம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கவர்மகர வெருளி. மகரநிற வெருளி அந்நிறத்தின் எல்லாச் சாயையும்() கொண்டிருக்கும். ஆனால், கவர்மகர வெருளி அதிலிருந்து மாறுபட்டது.  எழுச்சியூட்டும் நிறமாகப் பிறரைக் கவர்வதாக அமைவது. zesto என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கவர்ச்சியான என்று பொருள். rhodophobia என்பது மகர நிற வெருளி. 00 695. கவலை வெருளி – Anisychiaphobia  கவலை குறித்த வரம்பற்ற பேரச்சம் கவலை வெருளி….

வெருளி நோய்கள் 689-693: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 684-688: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 689-693 689. கலை வெருளி – Artemophobia கலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கலை வெருளி இசை வெருளி, நாட்டிய வெருளி, நாடக வெருளி முதலான கலை தொடர்பான வெருளி உள்ளவர்களுக்குக் கலை வெருளி இருக்கவும் வாய்ப்புள்ளது. கலைகள் வழியாக ஆட்சிக்கு எதிரான புரட்சிக்குரல், கலகக் குரல், முதலானவை எழுப்பப்படும் என ஆட்சியாளர்களுக்கும் முற்போக்குக் கருத்துகள் பரப்பப்படும் என மதவாதிகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்கும் கலை வெருளி உண்டாக வாய்ப்புள்ளது. 00  690. கலைமான் வெருளி –…

சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!?- 4: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 4 ஆக எந்த ஒரு திட்டத்திற்கும் நாம் ஒன்றிய அரசைச் சார்ந்தே உள்ளோம். ஆனால், பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசைப் பின்பற்றித்தான் தென் மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அஃது உலகத் தமிழ் மாநாடு ஆகட்டும் வேறு பல திட்டங்கள் ஆகட்டும். ஆனால் இந்த மொழி வளர்ச்சியில் நாம் மத்திய அரசைப் பின்பற்றலாம். பின்பற்றி நாம் என்ன கேட்கலாம்? அவர்கள் சமற்கிருத வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள் இல்லையா?…

நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 17 புற அழகு அழகல்ல  கல்வியே உண்மையான அழகு குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு. (நாலடியார் 131) பதவுரை: குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல;…

வெருளி நோய்கள் 684-688: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 679-683: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 684-688 684. கலவை வண்டி வெருளி – Seemptuophobia கற்காரை கலவை வண்டி (cement truck) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கலவை வண்டி வெருளி. கற்காரை கலவை(concrete mixer/cement mixer)வண்டி, கற்காரை சுமை வண்டி(cement truck) எனப்படுகிறது. எனினும் கற்காரையைச் சுமந்து செல்லும் பார வண்டியே கற்காரை சுமை வண்டி. வேறு எதையாவது சுமந்து செல்லும் பொழுது அப்பொருளின் பெயரில் அழைக்கப்பெறும்.  எனவே, இங்கே இது கலவை வண்டியையே குறிக்கிறது. 00  685. கலவைப்பண்ட வெருளி…

தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் 8  : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 9 வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு “இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில்…

வெருளி நோய்கள் 679-683: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 674-678: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 679-683 679. கரையான் வெருளி-Isopterophobia கரையான் முதலான மரம் அரிப்புப் பூச்சிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கரையான் வெருளி. பூச்சிகளால் அரிக்கப்படாத மரக்கலன்கள் என்று உறுதி அளித்தாலும் சிலர் பூச்சிகள் அரிக்கப்படும் என்று பேரச்சத்தில்தான் இருப்பர். 00 680. கலங்கரை விளக்க வெருளி – Hotatsosphobia கலங்கரை விளக்கம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கலங்கரை விளக்க வெருளி. உயர வெருளி உள்ளவர்களுக்குக் கலங்கரை விளக்கவெருளி வருகிறது. 00  681. கலப்பி வெருளி – Blenderphobia/Blendaphobia கலப்பான்/கலப்பி…