திருவள்ளுவர் பிறந்த நாளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா! – மறைமலை இலக்குவனார்

தமிழர் நாகரிகம் தமிழர் பண்பாடு குறித்த தமிழ்ச்சான்றோர் வகுத்த முடிவுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மாற்ற வேண்டா!                    கடவுள் வழிபாட்டில் ஊறிய நாம் பல்வேறு வடிவங்களைக் கற்பித்து வழிபடுகிறோம். ஓராற்றல் அஃதே பேராற்றல், அதற்கு வடிவம் இல்லை, அடியும் இல்லை, முடியும் இல்லை எனத் தெரிந்தும் முருகன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் திருமால் என்றும் ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம் திருநாமம் நாம் வழங்கிக் கொண்டாடுகிறோம். இஃது நம்பிக்கை. இங்கே ஆராய்ச்சிக்கு இடமில்லை.   பிறந்தநாள் கொண்டாடுகிறோம். யாருக்கு? ஆதியும் அந்தமும்…

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும்  எசுஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 7-ஆம் ஆண்டு (2017-2018) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கைகள் தொடங்கிவிட்டன. சூன் 2017-இல் வகுப்புகள் தொடக்கம் பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா முதலான வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு, நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும்….

ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!

ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்!   மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:     இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…

பூவுலகு: சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி – மின்னிதழ்

பூவுலகு:  சுற்றுச்சூழலுக்கான தமிழின் முதல் செயலி – மின்னிதழ்  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை திணை அடிப்படைகளில் கட்டுரைகள் சூழலியல் ஒளிப்படக்கட்டுரை சூழலியல் நிகழ்வுகள் பூவுலகின் நண்பர்கள் யார்? சுற்றுச்சூழல் இணைப்புகள் அறிமுக  எழுத்தாளர் படைப்புகள் சூழலியல் நூல்கள் அறிமுகம் சூழல் இன்று பூவுலகின் நண்பன் பூவுலகு நூல் அங்காடி பூவுலகு  விலையில்லா நூல்கள் சூழலியல் நூல்கள் அறிமுகம் சுற்றுச்சூழல் திரைப்படம் பூவுலகு காணொளிகள் பூவு – குழந்தைகளுக்கான சூழலியல் சூழலியல் கலை, இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் சூழலியல் செவ்வி சித்த மருத்துவ சூழலியல் நதிகளைத் தொலைத்தோம் மரங்களின் நிழலில் வாழ்வோம் சூழலியல்-தத்துவம்,கொள்கை,அறிக்கைகள் சூழலியல் சொல் நிலைத்துவமான, கவித்துவமான படைப்புகளுடன் பூவுலகு மின்னிதழ் இந்த இணைப்பில் சென்று  உங்கள் மொபைலில் செயலியை தரவிறக்கம் செய்யுங்கள் www.poovulagu.in…

உலகலாவிய சிறுகதைப் போட்டி

பேரன்புடையீர், வணக்கம். மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி! தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கு அழைப்பு சிறுகதை அனுப்ப இறுதி நாள்: ஆனி 16, 2048 / 30.06.2017 மலேசியா நாடடில் இயங்கி வரும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உலகம் தழுவிய சிறுகதைப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இப்போட்டியில் கலந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத்தலைவர்சு.வை.லிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். இவ் உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியின் இந்திய ஒருங்கிணைப்பாளரும் மதுரை…

இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு, மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா

பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு ஆகத்து 2017  மேரிலாந்து மாநிலம், அமெரிக்கா   அன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், மற்றும் பல தமிழ் அமைப்புகளோடு இணைந்து, வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாடு, இந்த ஆண்டு ஆகத்து மாதம் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டை ஒட்டி, குறுந்தொகை சார்ந்த கட்டுரைகள் அடங்கிய மலர் ஒன்று வெளியிடப்படும்.  இம் மலரில் வெளியிடுவதற்கு, தமிழறிஞர்களிடமிருந்து குறுந்தொகை பற்றிய கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  தங்கள் கட்டுரைகளை ஆனி 16 / சூன் 30, 2017 நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.     படைப்புகளுக்கான விதிமுறைகள்; அனுப்பப்படும் படைப்பானது, ‘குறுந்தொகை’ சார்ந்தோ குறுந்தொகையில் இடம்…

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல்   கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.  தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…

தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 : பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்ப்பேராய விருதுகள் – 2017 Thamizh Academy Awards – 2017 பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன (Nominations Invited) பரிந்துரைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள்: வைகாசி 01, 2048 / மே 15, 2017     முகவரி: தமிழ்ப்பேராயம் திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் நான்காவது தளம், மைய நூலகக் கட்டடம், தி.இ.நி.(எசு.ஆர்.எம்) நகர், காட்டாங்குளத்தூர் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி : +91-44-2741 7375, 2741 7376

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ  இளம் அறிஞர் விருது – 2015-16   முனைவர் மு. வனிதா   முனைவர் மு. வனிதா 1979இல் வேலூர் மாவட்டம் வீரமுட்டிப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திராவிடப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இலக்கியம்-இலக்கணத்தில் புலமை பெற்றவர். திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்திட்ட உதவியாளராக…

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி

[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா :  தொடர்ச்சி] செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி இளம் அறிஞர்கள் – 2014-2015 முனைவர் அ. சதீசு   முனைவர் அ. சதீசு 1982 இல் விழுப்புரம் மாவட்டம் கண்ணியம் என்னும் ஊரில் பிறந்தவர். மயிலம், சிரீமத்து சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில் இலக்கிய இளங்கலை (பி.லிட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப்…