தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு

அன்பான தோழருக்கு வணக்கம்!  சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!  நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி:  9841949462 தலைமைச் செயலகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம்  பேசி: 7667077075, 9047162164 ஊடகம்: www.kannotam.com இணையம்: tamizhdesiyam.com  

செந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்!

அன்புடையீர் வணக்கம்!!!  தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.   கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம்!!!!  கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்…  அப்படிச் செய்தால்தான் என்ன? தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ??…

பனுவலின் அம்பேத்கர்பற்றிய தொடர் நிகழ்வுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5: 30 மணிக்கு நடைபெறும் இடம்: பனுவல் புத்தக விற்பனை நிலையம் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041. தொடர்புக்கு : 89399 – 67179 / 044-4310-0442 பங்குனி 15 / மார்ச்சு 29        ஞாயிறு     : ‘தலித் முரசு’ இதழ்களின் கண்காட்சி தோழர். நீலகண்டன் (கருப்புப் பிரதிகள்) தொடங்கிவைப்பு பங்குனி 20 / ஏப்பிரல் 3 வெள்ளி:  அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் – வாசிப்பு அருள்மொழி, பாத்திமா பர்ணாடு, வ. கீதா,…

தகவலாற்றுப்படை – மாதத் தொடர் சொற்பொழிவுக் கூட்டம்

  தகவலாற்றுப்படை – மாதத் தொடர் சொற்பொழிவுக்  கூட்டம் நாள் :  பங்குனி 27, 2046 /10.04.2015.     அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com

திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு மறுபதிப்பு வெளியீட்டு விழா

   என் தாத்தா திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் 1958ஆம் ஆண்டு வெளியிட்ட திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பை மறுபதிப்பு செய்துள்ளனர். இன்று பங்குனி 14, 2046 / மார்ச்சு 29, 2015 வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. வருக! வருக! அன்புடன் புனிதா ஏகாம்பரம்