வெருளி நோய்கள் 529-533: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 524-528:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 529-533 ஏமாற்றம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏமாற்ற வெருளி.இவ்வெருளி உடையோர் எண்ணங்கள் நிறைவேறாமற் போதல், நம்பிக்கைக் குலைவு, மனமுறிவு, மனக்கசப்பு, தோல்வியினால் விளையும் வெறுப்புனர்ச்சி போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.00 ஏரி அல்லது சதுப்பு நிலம் குறித்துக் காரணமின்றி வரும் அச்சம் ஏரி வெருளி.ஏரி அல்லது சதுப்பு நிலத்தில் மூழ்கிவிடுவோம், ஏரி நீர் துன்பம் தரும், ஏரி உடைப்பெடுக்கும், ஏரி வறண்டால் வேளாண்மை முதலியன பாதிப்புறும் முதலிய கவலைகளுக்குத் தேவையின்றி ஆளாகி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.Limne…

தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 6 : பாணினியத்தின் சிறப்பு?!-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 7 தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே தமிழ் நூல்களைக் காப்பதற்காக இயற்றப் பெற்ற தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தமிழ்ச்சொற்களைக் கையாள்வதுதானே முறை. தமிழ் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவும் சமற்கிருதத்தை உயர்த்தும் நோக்கிலும் வையாபுரி போன்றோர் பல சொற்களையும் சமற்கிருதமாகத் தவறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியர் காலத்தில் எழுத்தமைப்பு உருவாக்கி அதன்பின் சொல் வளத்தை உருவாக்கிய சமற்கிருதச் சொற்கள் எங்ஙனம் தொல்காப்பியத்தில் இடம் பெற இயலும்? தமிழ் இலக்கணம் வகுக்க வந்த தொல்காப்பியர் எதற்கு வளமில்லாத…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 1 தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2 நாம் செய்ய வேண்டியது என்னவாக இருக்க வேண்டும்? தமிழுக்குத் திட்டங்கள் தர வேண்டும். தரவில்லையே! ஒன்றும் செய்யவே இல்லையே! நமக்கு ஒன்றும் வேண்டா, செம்மொழி அறிவிக்கப்பட்ட பிறகு செம்மொழி விருது கொடுத்தார்கள். யாருக்கு? இளைய அறிஞர்களுக்கு ஆண்டுக்கு ஐவருக்குக் கொடுத்தார்கள். (அதிலும் சில ஆண்டுகள் குறைவாகக் கொடுத்தார்கள்.) ஒவ்வோர் ஆண்டும்  சமற்கிருத அறிஞர்கள் 15 பேர், அரபி அறிஞர்கள் 3 பேர், பெருசியன் அறிஞர்கள் 3 பேர், பாலி/பிராகிருத…

வெருளி நோய்கள் 524-528: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 519-523: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 524-528 ஏணி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏணி வெருளி.உயரத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கும் ஏணி மீது அச்சம் இருக்கும்.ஏணியில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது கால் தவறி விழுந்துவிடுவோம் அல்லது ஏணி புரண்டு விழுந்து விடும் என்றெல்லாம் தேவையற்ற கவலை கொள்ளேவார் ஏணி வெருளிக்கு ஆளாகின்றனர்.climac என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏணி.00 ஏந்து(appliance) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏந்து வெருளி.சமையலுக்குப் பயன்படும் ஏனங்கள் முதலான துணைப் பொருள்கள், அன்றாடத் தேவை நிறைவேற்றத்திற்கு உதவும் குளிர்ப்பி(Air…

சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 1011. Automated teller machine           தானியங்கிப் பணப்‌ பொறி teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன. விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக…

வெருளி நோய்கள் 519-523: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 514-518: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 519-523 எளிமைபற்றிய வரம்பற்ற பேரச்சம் எளிமை வெருளி.எளிய நிலையில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதனாலும் எளிமை வெருளிக்கு ஆளாவர்.00 எறும்பு குறித்துக் காரணமில்லாமலே அஞ்சுவது எறும்பு வெருளி.எறும்பு குமுக ஒழுக்கம் உடைய செய்தியைத் தம்மிடையே நேர்த்தியாகப் பரிமாறிக் கொள்ளும் திறன் மிக்க உயிரியாகும். எனினும் இது கடித்தால் வலிக்கும் என அஞ்சுவர். கட்டெறும்பு, செவ்வெறும்பு முதலான சில வகை எறும்புகள் கடித்தால் நீண்ட நேரம் வலி இருக்கும். எனவே, எறும்பைக் கண்டால், சில இடங்களில்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது, இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது “ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம். கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா? விடை:…

வெருளி நோய்கள் 514-518: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 509-513 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 514-518 உயிர்த்தெழு நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் எழு நாள் வெருளி.இயேசு கிறித்து கி.பி.33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம்நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிகும் நாளே உயிர்த்தெழு நாள் (Easter). ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா என்றும் பாச்சா(Pascha) என்றும் சொல்வர். புனித வெள்ளியின் மூன்றாம்நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் இதனை உயிர்ப்பு ஞாயிறு(Resurrection Sunday) என்றும் சொல்வர்.பாச்சா(Pascha) என்னும் அரமேயச் சொல்லுக்குக் ‘கடந்து போதல்’ எனப் பொருள். இசுரேல் மக்கள் எகித்தில் இருந்து…

வெருளி நோய்கள் 509-513: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 504-508 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 509-513 எலுமிச்சை(lemon) குறித்த அளவுகடந்த பேரச்சம் எலுமிச்சை வெருளி.எலுமிச்சை எளியோரும் பயன்படுத்தக் கூடிய எல்லாக் காலத்திலும் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த ஒன்றாகும். எனினும் எலுமிச்சைச்சாறு பற்சிப்பியைப்(tooth enamel) பாதிக்கும், பற் சிதைவு அடையும், நெஞ்சு எரிச்சல் வரும், வயிற்றுப் புண்ணை உண்டாக்கும், வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் என்றெல்லாம் பக்க விளைவுகளை எண்ணி, அளவோடு பயன்படுத்தும் எண்ணம் கொள்ளாமல் அஞ்சுவோர் உள்ளனர். 00 எலுமிச்சைப் பானம்(lemonade)மீதான மிகையான பேரச்சம் எலுமிச்சைப் பான வெருளி.எலுமிச்சை வெருளி உள்ளவர்களுக்கு எலுமிச்சம்…

வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி) வெருளி நோய் 504-508 எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம்…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23 சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! ““- – என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப;சாலார் சாலார் பாலர் ஆகுபவே.” புறநானூறு 218 : 5 – 7 பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது. சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.இவை பாடலின்…

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 144 & 145 + நூலரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.      (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௪ – 414) தமிழே விழி!                                                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 144 & 145; நூலரங்கம் புரட்டாசி 26, 2056 ஞாயிறு 12.10.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…

1 2 178