சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 986. Audit notes தணிக்கைக் குறிப்புகள் தணிக்கை அல்லது கணக்கு அலுவலகத்தில் கிடைக்கும் தரவு, தகவல் அல்லது ஆவணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கை முடிவுகளைக் கொண்ட, தணிக்கை அலுவலகத்தால் வெளியிடப்படும் குறிப்பே தணிக்கைக் குறிப்பாகும். 987. Audit of accounts கணக்குகளின் தணிக்கை கணக்கியல் உலகின் ஒரு பகுதியாகத் தணிக்கை உள்ளது. கணக்கியல், நிதிப் பதிவுகளை எச்சார்புமினறித் தற்போக்கில் மேற்கொள்ளும் ஆய்வு ஆகும். நிறுவனம் அல்லது…
வெருளி நோய்கள் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் தொடர்ச்சி) 101.) 62 ஆம் எண் வெருளி- Hexekontadyophobia62 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 62 ஆம் எண் வெருளி.எண் 62 என்பது வணிகம், பணம் தொடர்பான எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, எதிர்மறை எண்ணத்தில் வணிகத்தில் தோல்வி, பண இழப்பு வரும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.கிரேக்கத்தில் hexḗkonta என்றால் 60, dyo என்றால் 2.00102.) 666 ஆம் எண் வெருளி – Hexakosioihexekontahexaphobia666 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த…
124. கருநாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரில் சமற்கிருதம் பேசுநர் உள்ளதாகக் கூறப்படும் பொய்யுரை – இணைப்பு
(சனாதனம் பொய்யும் மெய்யும் – நிறைவான செய்தி தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 124 சமற்கிருத நூல்கள் தமிழ் நூல்களுக்குப் பிற்பட்டவை, தமிழ் இலக்கியக் கருத்துகளைத் திருடித் தமதாகக் காட்டுவன, காலந்தோறும் தமிழ் இலக்கியச் சிறப்புகளைச் சிதைப்பதையும் பொய்யான புகழைச்சமற்கிருத நூல்களுக்கு ஏற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள கூட்டம் இயங்கி வருவதையும் உணர்த்துவதற்கும்தான். அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு என்றெல்லாம் கூறுவோம். இற்றைக்காலத்தில் கோயபல்சு புளுகு என்றும் கூறுவோம். இவற்றையெல்லாம் விஞ்சியது சமற்கிருத நூலார் புளுகுகள். இனி நாம், சமற்கிருதப் புளுகு என்றோ சமற்கிருத நூலார் புளுகு…
122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123 123. நிறைவான செய்தி என்ன? பக்தியின் பெயரால் ஞானம் என்ற பெயரால் யோகம் என்ற பெயரால் தத்துவம் என்ற பெயரால் ஆன்மீகம் என்ற பெயரால் கீதை பன்னிப்பன்னித் திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம் நான்கு வருணப்பாகுபாடுதான் என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118). சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள்…
வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள்
(வெருளி நோய்கள் 96 -100 தொடர்ச்சி) வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் 21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia ‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி. வண்டி ஓட்டும் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதன் அடையாளமாக ‘எல்’(L) என்னும் பயிலுநர்(Learner) பலகை மாட்டி ஓட்டுவர். பயிலுநர் பலகையைக் கண்டு சாலையில் செல்லும் பிறருக்கும் அச்சம் வந்து அதனால் ‘எல்/L’ எழுத்து மேல் பேரச்சம் வருவதும் இயற்கைதான்….
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? – இலக்குவனார் திருவள்ளுவன் இணைய உரை
திருக்குறள் திருவிழா✨ 📚 திருக்குறள் கற்போம், கற்பிப்போம்! -அவையின் 1550ஆவது கொண்டாட்ட விழாத் தொடர் ஆனி 29, 2056 முதல் ஆடி 06, 2056 முடிய 13.07.2025 முதல் – 22.07.2025 முடிய 🌟 தமிழ்ச் சான்றோர் பேரவை🌟 இருநூறாவது சிறப்பு நிகழ்வு 📅 நாள்: ஆனி 29, 2056 / 13.07.2025 ஞாயிறு 🕰 நேரம்: காலை 09:00 மணி 📍 இடம்: தமிழ்த்தேசம் (Clubhouse) ─────────────── 🎤 சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? எனும் தலைப்பில் ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்…
121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!
(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும் 121 “சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். என்று பேசியுள்ளார். மேலும், 1912-இல் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர்…
வெருளி நோய்கள் 96 – 100 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 91-95 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 96 -100 96.) 58 ஆம் எண் வெருளி – Pentekontoctophobia58 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 58 ஆம் எண் வெருளி.pentekonta என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 50 என்றும் octo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 8 என்றும் பொருள். Pentekontoctophobia – fear of 58 (branch of numerophobia) = 58 குறித்த வெருளி. எண் வெருளி வகைப்பாட்டைச் சேர்ந்தது.58 ஆம் எண்ணிற்குரிய சொல், வளமின்மை என்னும் பொருள் தரும் மற்றொரு…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 : உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 : பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18 உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்! “யானை வேட்டுவன் யானையும் பெறுமே;குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே” புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன்திணை: பொதுவியல்துறை: பொருண்மொழிக் காஞ்சிசொற்பொருள்: பூழ் = சிறு பறவை; காடை (ஒருவகைப் பறவை) “உயர்ந்த இலக்கு வெற்றியைத் தரும், தாழ்ந்த இலக்கு தோல்வியைத்…
119/133. சனாதனம் இல்லறத்தைப் போற்றுவது என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 117 + 118 தொடர்ச்சி) ஆரியர்களின் குடும்ப வாழ்க்கை என்பது யாருடனும் யாரும் உறவு கொள்ளலாம் என்பதே. தமிழர்களின் குடும்ப வாழ்க்கையோ இல்லறம் என அறமாகக் கூறப்படுகிறது. மனைவியை இழிவு படுத்துவது சனாதனம். மனைவியின் சிறப்புகளைப் போற்றவதே தமிழர் நெறி. இது குறித்துத் திருக்குறள் அறிஞர் பேரா.சி.இலக்குவனார், “இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியின் சிறப்புகளைத் தொகுத்துரைப்பதே திருக்குறளின் இல்லறவியல்” என்கிறார். “மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது என்கிறார். “நல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக்கூடியவள் மனைவியேயாவாள். அவள் தன் கொண்ட கணவனிடம் நீங்காத…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 மூலத் திராவிட மொழி என்னும் கதை தமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதே நேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி மூலத் திராவிட மொழி என்னும் கதையை அளக்கின்றனர். “திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியை…
வெருளி நோய்கள் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 86-90 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 91-95 91.) 47 ஆம் எண் வெருளி – Tessarakontaheptaphobia47 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 47 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் tessarakonta = 40, hepta = 747 என்பது கூட்டுச் சதியுடன் தொடர்புடையது என்றும் எண் 47 குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.47 மட்டுமல்லாமல், 247, 14723, என்பனபோல் 47 எண் இடையில் வரும்எண்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். எண் 47 தீயூழ் தருவது, சாபமிடப்பட்ட எண் என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சம்…