இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

  இராசபக்சவை வீழ்த்தியது எது?   “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….”  இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள்.  அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…

தமிழியல் ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி அறிஞர் ஆ.வேலு(ப்பிள்ளை)- இரவிக்குமார்

ஈழத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை (1936-2015): தமிழியல் ஆய்வுக்கு வழிகாட்டி     ஈழத்தைச் சேர்ந்த அறிஞர் ஆ. வேலுப்பிள்ளை மறைந்த செய்தியை  அறிந்தபோது கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவரது நினைவு எழாமல்போய்விட்டதே என வருத்தமுற்றேன். அவரை  நேரில் அறிந்ததில்லை எனினும் அவரது எழுத்துகள் வழியே நெருக்கமாய் உணர்ந்திருக்கிறேன். தொல்லியல், கல்வெட்டியல், செவ்வியல் இலக்கியம் எனப் பல்வேறுதுறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராக இருந்தவர். தமிழும் பௌத்தமும் குறித்துபேராசிரியர்பீட்டர் சால்க்குடன் இணைந்து அவர் தொகுத்த இரண்டு தொகுதிகள் மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்தவை. தனது 28 ஆவது அகவைக்குள் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1960-1961 ஆம் ஆண்டுக்கான இலங்கை குடிமைப்பணித் தேர்வில் இலங்கை முழுதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக அவர் இருந்தார். அந்தப் பதவிக்குச் சென்றிருந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கப் பொறுப்புகளுக்குப் போயிருக்கலாம். ஆனால் ஆசிரியர் பணியிலேயே தொடரவேண்டும் என அவர் முடிவெடுத்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் கல்வெட்டியலைப் பயின்று…

நம்மொழியை நாமறிவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

நம்மொழியை நாமறிவோம்!   இத்தாலி நாட்டிலிருந் திங்கே வந்து இயேசுபிரான் கருத்துகளைப் பரப்பு தற்கே முத்தான தமிழ்மொழியைப் பேசக் கற்று முதலில்தம் பெசுகியெனும் பெயரை மாற்றித் தித்திக்க வீரமா முனிவ ரென்று திருத்தமுறத் தமிழினிலே சூட்டிக் கொண்டு வித்தாகக் கிறித்துவத்தை விதைப்ப தற்கே வீதிகளில் மதக்கருத்தை உரைத்து வந்தார் ! ஓரிடத்தில் உரையாற்றும் போது பேச்சில் ஒருகோழி தன்னுடைய குட்டி தன்னைப் போரிட்டுக் காப்பதைப்போல் என்றே உவமை பொருத்திச்சொல்லக் கேட்டமக்கள் சிரித்து விட்டார் கூறியதில் தவறேதோ உள்ள தென்று கூட்டத்தைப் பார்த்தவரும் கேட்கும் போது…

கியூபெக்கு மாகாணத் தாய்மொழிப்பற்று வெல்க!

 பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை  மிகுவிக்க ஆங்கில அறிவிப்புப் பலகைகளை நீக்கச் சொன்ன கனடா அரசு ஒட்டாவா : கனடா நாட்டின், கியூபெக்கு மாகாண மருத்துவமனைகளில் உள்ள ஆங்கில அறிவிப்பு பலகைகளை நீக்குமாறு  அண்மையில் இந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கியூபெக்கு மாகாணத்தின்  ஆட்சி மொழி பிரெஞ்சு.  ஆங்கிலமும் அதிகார முறை மொழியாக உள்ளது.  எனினும்   பிரெஞ்சை பரப்பும் விதமாக இப்பகுதியிலுள்ள காசுபே நகரில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. ஐம்பது  விழுக்காட்டிற்கும் மிகுதியாக ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரெஞ்சு மொழிப்…

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2   ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ்…

இனிதே இலக்கியம் – 9 தமிழன்னையைப் போற்றுவோம்!: க.சோமசுந்தரப்புலவர்

9 தமிழன்னையைப் போற்றுவோம்!     செந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியைத் தென்பொதியச் சந்தனச் சோலையில் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச் சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவியினிலே வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துதுமே!   தங்கத்தாத்தா என அழைக்கப்பெறும் யாழ்ப்பாணத்து நவாலியூர் க.சோமசுந்தரப்புலவர் அவர்களின் பாடல்.   “தமிழன்னையே! என்றும் அறிவுச் செல்வமும் இளமையும் மிக்க செந்தமிழ்ச்செல்வி நீ! அனைத்துக் கலைகளும் உடையவள் ஆதலால் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் நீயே! தென் பொதிகையில் நறுமணம் மிக்க சந்தனக்காட்டில் ஏழிசை கூவும் குயிலும் நீயே! புலவர்…

தேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா

  அன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு, வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில்  எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன்  வேண்டிக் கொள்கிறோம்.

ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார்  1/2   பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையும் முதன்மையும் உடைய தமிழ் இலக்கியங்கள் இயற்கையாலும் வஞ்சகத்தாலும் அழிந்து போயின. என்றபோதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குள் உட்பட்ட சில இலக்கியங்களையாவது அழிவிலிருந்து மீட்ட அறிஞர்கள் சிலரால் செந்தமிழ் இலக்கியங்களை நாம் படித்து இன்புறும் பேறு பெற்றுள்ளோம்.   அச்சுப்பொறி நம் நிலப்பகுதியில் அறிமுகமானபோது முதலில் (1557) அச்சேறியவை தம்பிரான் வணக்கம் முதலான தமிழ் நூல்களே. இதன் பயனாய் அங்கும் இங்குமாய் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் எங்கெங்கும் புகழ்மணக்க அச்சுச்சுவடிகளில் அரங்கேறின….

ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்

ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை!  அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில்  பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன்,  24.07.15)

நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம்   பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன.   முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி

பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும் அனைவருக்கும் இனிய வணங்கங்கள்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி சப்பானில் வசிக்கும் தமிழ் மக்கள், சப்பானிய மக்களின் பேராதரவோடு கடந்த புரட்டாசி 16 /அக்டோபர்3 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது பரம்பரை உணவு வகைகளான கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ், இட்டலி மற்றும் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகள் எனப் பல்வேறு வகையான உணவுகள் சப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. நாம் அமைத்திருந்த செம்மொழி நூலகம், தமிழர்களின் பரம்பரை விளையாட்டுகளான சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம்,கிளித்தட்டு நாற்கரம், சிறுவர் சிறுமியர்…

தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா

தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா