‘பாரதஇரத்தினா’வை இழிவுபடுத்தும் சுப்பிரமணியசாமி: தா.பாண்டியன் கண்டனம்

  இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கோரியிருப்பது, ‘பாரதஇரத்தினா’ விருதை இழிவுபடுத்தும் செயல் என்று தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “பாசகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் இராசபக்சேவுக்குப் பாரதஇரத்தினா விருது அளிக்க வேண்டும் எனக் கோரியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காகப் போர் விதி மீறல்களை மீறிய…

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…

இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் : இரவி நடராசன்

  இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் உருவாக்கம்: இரவி நடராசன் மின்னஞ்சல்: ravinat@gmail.com மேலட்டை உருவாக்கம்: இலெனின் குருசாமி மின்னஞ்சல்: guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com ’சொல்வனம்’ இதழில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் எழுதிய இணையம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதைப் பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த…

புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில்…

இன்ஃபோசிசு நடத்தும் இன்ஃபோசியர் குடும்பச்சிறாருக்கான அறிவியல் ஓவியப் போட்டி

இன்ஃபோசிசு அறிவியல் நிறுவனம் நடத்தும்   இன்ஃபோசிசு நிறுவன ஊழியர்களின் குடும்பத்தினர் உறவினர்களுக்கான   உலகளாவிய   அறிவியல் ஓவியப் போட்டி   4 அகவை முதல் 16 அகவையுடைய சிறுவர் சிறுமியர் மட்டுமே பங்கேற்கலாம்.   போட்டி இறுதி நாள் ஐப்பசி 10, 2045 / அக்.27, 2014   இந்திய நேரம் இரவு 11.00 மணி   பெயர், அகவை, முகவரி , மின்வரி (e-Mail) விவரங்களுடன் வரைந்த படத்தை   500அயிரைஎண்மத்திற்குள் (500 KB) வலைவலகிட்டு (scan) மின்னஞ்சலில் அனுப்ப…

“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙு

       (புரட்டாசி 5, 2045 / 21 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)   தீர்மானம் – 7: தமிழ்நாட்டை கதிர்வீச்சு நோயாளியாக, வேதியக் குப்பை மேடாக மாற்றாதே!   இந்திய அரசு, தனது பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை ஆதாயத்திற்காகவும் தனது ஆதாயங்களுக்காகவும் மனித குல அழிவுத் தொழில்நுட்பமான அணுப்பிளப்புத் தொழிற்சாலைகளை மேலும் மேலும் தமிழ்நாட்டில் நிறுவி வருகிறது. மற்ற மாநிலங்கள் மறுத்துவிட்ட நிலையில், தமிழகக் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டியது. அணுக்கதிர் வீச்சினால் உலகின் பல பகுதிகளில் மனிதப் பேரழிவு நேர்ந்ததை அறிந்து…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!

இன்று நடைபெற இருந்த “வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” மாநாடு தள்ளிவைப்பு!   தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் சென்னையில் ‘வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்’ என்ற தலைப்பிலான தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு, இன்று (புரட்டாசி 12, 2045 / 28.09.2014), நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.   இந்நிலையில், முதலமைச்சர் செயலலிதா வழக்குத் தொடர்பானத் தீர்ப்பால் தமிழகமெங்கும் பதற்றச்சூழல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநாடு வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது. மாநாடு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.   மாநாடு…

“வெளியார் அதிகரிப்பும் தமிழர் வாழ்வுரிமையும்” – தமிழகம் தழுவிய சிறப்பு மாநாடு

  தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தும் வாழ்வுரிமை மாநாடு காலம்: புரட்டாசி 12, 2045 / 28.09.2014, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இடம்: தியாகராயர் நகர் செ.தெ.நாயகம் பள்ளி உலகத் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், மிகை எண்ணிக்கையில் நுழைந்து குடியேறிக் கொண்டும், கல்வி – வேலை வாய்ப்பு – தொழில் – வணிகங்களை கவர்ந்து கொண்டுமுள்ள அயலார் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் புரட்டாசி 12, 2045 / செப்டம்பர்…

கங்கைகொண்ட சோழபுரம் மண்ணின்மைந்தர்களுக்கு வேண்டுகோள்

சோழப்பெருவேந்தன் இராசராச சோழனது அருமைப்புதல்வன் முதலாம் இராசேந்திர சோழன், தி.பி. 1043 முதல் தி.பி. 1075 வரை / கி.பி.1012 முதல் 1044 வரை சோழ மண்ணில் ஆட்சி புரிந்த மாமன்னன். வடக்கே கங்கை முதல் தெற்கே கடாரம் வரை வெற்றி கண்ட வேந்தன்.கங்கை வெற்றிக்குப்பின் அவ்வெற்றியின் நினைவாக ஊரையும் கோவிலையும் தேர்ந்துவந்து அருகே சோழகங்கம் என்னும் ஏரி ஒன்றையும் வெட்டுவித்துள்ளான். கங்கைகொண்ட சோழபுரத்தில் அம்மன்னன் எடுப்பித்த கோவில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற பெயரில் புகழோடு இன்றும் இருந்து வருகிறது. இக்கோவிலைப் பற்றியும் கங்கைகொண்ட…

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி

மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டுக் ‘கண்ணியம்’ அன்பர்களுக்குக் கவிதைப் போட்டி இறுதி நாள் : ஐப்பசி 13, 2045 / 30.10.2014