தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா

அன்புடையீர், வணக்கம். தி.இரா.நி.பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா ஆவணி 9. 2045 /ஆக.25-ஆம் நாள், திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை, காட்டாங்குளத்தூர் வளாகத்தில் உள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்ப் படைப்பாளிகளையும், தமிழறிஞர்களையும் விருதளித்துச் சிறப்பிக்கும்  இவ் விழாவில் கலந்துகொண்டு, சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி.. முனைவர் இல. சுந்தரம் : +91-98423 74750    

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

சென்னை எத்திராசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரியில் தமிழ் முதுகலை தொடங்கப்பெற்ற வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, ‘பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ்’ என்னும் தலைப்பில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் நிதிஉதவியுடன் பன்னாட்டுக் கருதரங்கம் ஒன்று நடைபெற உள்ளது; எதிர்வரும் கார்த்திகை 9,10, 2045 / நவம்பர் மாதம் 25, 26 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெறும். இதுதொடர்பாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியை முனைவர். ந.அங்கயற்கண்ணி, பேராசிரியை முனைவர். சு. புவனேசுவரி, பேராசிரியை முனைவர்.பா. கெளசல்யா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எத்திராசு மகளிர் கல்லூரியின்…

இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014

வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு,  பாரதியவித்யா பவன் சிற்றரங்கில்  நிகழ இருக்கிறது..  தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க  வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..)  ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)​​