வெருளி நோய்கள் 524-528: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 519-523: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 524-528 ஏணி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஏணி வெருளி.உயரத்தைக் கண்டு பயப்படுபவர்களுக்கும் ஏணி மீது அச்சம் இருக்கும்.ஏணியில் ஏறும் பொழுது அல்லது இறங்கும் பொழுது கால் தவறி விழுந்துவிடுவோம் அல்லது ஏணி புரண்டு விழுந்து விடும் என்றெல்லாம் தேவையற்ற கவலை கொள்ளேவார் ஏணி வெருளிக்கு ஆளாகின்றனர்.climac என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஏணி.00 ஏந்து(appliance) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏந்து வெருளி.சமையலுக்குப் பயன்படும் ஏனங்கள் முதலான துணைப் பொருள்கள், அன்றாடத் தேவை நிறைவேற்றத்திற்கு உதவும் குளிர்ப்பி(Air…
சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 1011. Automated teller machine தானியங்கிப் பணப் பொறி teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன. விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக…
வெருளி நோய்கள் 519-523: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 514-518: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 519-523 எளிமைபற்றிய வரம்பற்ற பேரச்சம் எளிமை வெருளி.எளிய நிலையில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதனாலும் எளிமை வெருளிக்கு ஆளாவர்.00 எறும்பு குறித்துக் காரணமில்லாமலே அஞ்சுவது எறும்பு வெருளி.எறும்பு குமுக ஒழுக்கம் உடைய செய்தியைத் தம்மிடையே நேர்த்தியாகப் பரிமாறிக் கொள்ளும் திறன் மிக்க உயிரியாகும். எனினும் இது கடித்தால் வலிக்கும் என அஞ்சுவர். கட்டெறும்பு, செவ்வெறும்பு முதலான சில வகை எறும்புகள் கடித்தால் நீண்ட நேரம் வலி இருக்கும். எனவே, எறும்பைக் கண்டால், சில இடங்களில்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது, இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது “ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம். கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா? விடை:…
வெருளி நோய்கள் 514-518: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 509-513 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 514-518 உயிர்த்தெழு நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் எழு நாள் வெருளி.இயேசு கிறித்து கி.பி.33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம்நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிகும் நாளே உயிர்த்தெழு நாள் (Easter). ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா என்றும் பாச்சா(Pascha) என்றும் சொல்வர். புனித வெள்ளியின் மூன்றாம்நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் இதனை உயிர்ப்பு ஞாயிறு(Resurrection Sunday) என்றும் சொல்வர்.பாச்சா(Pascha) என்னும் அரமேயச் சொல்லுக்குக் ‘கடந்து போதல்’ எனப் பொருள். இசுரேல் மக்கள் எகித்தில் இருந்து…
வெருளி நோய்கள் 509-513: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 504-508 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 509-513 எலுமிச்சை(lemon) குறித்த அளவுகடந்த பேரச்சம் எலுமிச்சை வெருளி.எலுமிச்சை எளியோரும் பயன்படுத்தக் கூடிய எல்லாக் காலத்திலும் கிடைக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த ஒன்றாகும். எனினும் எலுமிச்சைச்சாறு பற்சிப்பியைப்(tooth enamel) பாதிக்கும், பற் சிதைவு அடையும், நெஞ்சு எரிச்சல் வரும், வயிற்றுப் புண்ணை உண்டாக்கும், வாய்ப்புண்ணை ஏற்படுத்தும் என்றெல்லாம் பக்க விளைவுகளை எண்ணி, அளவோடு பயன்படுத்தும் எண்ணம் கொள்ளாமல் அஞ்சுவோர் உள்ளனர். 00 எலுமிச்சைப் பானம்(lemonade)மீதான மிகையான பேரச்சம் எலுமிச்சைப் பான வெருளி.எலுமிச்சை வெருளி உள்ளவர்களுக்கு எலுமிச்சம்…
வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி) வெருளி நோய் 504-508 எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 22 : ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23 சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! ““- – என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப;சாலார் சாலார் பாலர் ஆகுபவே.” புறநானூறு 218 : 5 – 7 பாடியவர்: கண்ணகனார், நத்தத்தனார் எனவும் சொல்வர்.திணை: பொதுவியல். துறை: கையறு நிலை.குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்ததனைக் கண்டு பாடியது. சான்றோர், சான்றோர் பக்கமே சேர்வர்; சால்பில்லாதார் பக்கமே சால்பில்லாதார் சேர்வர்.இவை பாடலின்…
தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 144 & 145 + நூலரங்கம்
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௪ – 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 144 & 145; நூலரங்கம் புரட்டாசி 26, 2056 ஞாயிறு 12.10.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…
வெருளி அறிவியல் 499-503 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 494-498: தொடர்ச்சி) வெருளி அறிவியல் 499-503 எபிரேயர்/(இ)யூதர்கள்(Jews) மீதும் இவர்கள் தொடர்பானவை மீதும் ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் எபிரேயர் வெருளி.எபிரேய இனத்தைச் சேர்ந்த (இ)யூதம் என்னும் சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் மீது ஈவிரக்கமற்றவர்கள், அளவுகடந்து சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவர்கள், எவரையும் எளிதில் நம்பாதவர்கள் என்றெல்லாம் எண்ணுபவர்கள், இவர்கள் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.1096இல் நடைபெற்ற முதலாம் சிலுவைப் போர், 1290இல் பிரித்தானியாவிலிருந்து எபிரேயர் /(இ)யூதர்கள் வெளியேற்றப் பட்டமை, 1391 இல் எசுபானியாவில் எபிரேயர் / (இ)யூதப் படுகொலை நிகழ்ந்தது, 1492இல் எசுபானியாவிலிருந்து…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி) ‘என’, இனி’ அடுத்து வல்லினம் மிகும் . .என தெரிவிக்கிறேன்’ என்று உள்ளது “என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம். எனத் தெரிவிக்கிறேன் எனக் கூறினான் எனச் சொல்லேன் எனப் படிக்க வேண்டும் எனத் திட்டமிடு எனத் தெளிவாகக் கூறு எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பாராட்டினார் எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது…
வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…