தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 6 கன்னடத்தில் சமற்கிருதம் கலப்பதற்கு எதிர்ப்பு கன்னட மொழியில் சமற்கிருதக் கலப்பு குறித்துப் பின்வரும் நூற்பாவில் அதற்கு எதிராகத் தெரிவிக்கிறார் கவிராச மார்க்கம் நூலாசிரியர். தற்சமந் தன்னில் இணைந்து பிணைந்த கன்னட நடையினைக் கண்டு கைக்கொள்க நூலறி புலவர் நுவன்ற நெறியிது வடமொழி கலந்து வழங்குதல் தகாது (51) சமற்கிதச் சொற்களைக் கலந்து எழுதப் புலவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமற்கிருதக் கலப்பு கடூரம் பயக்கும் கன்னட மொழியில் வடெமாழிக்…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 4 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 5 வரி வடிமைப்பியல் தமிழைப்போலவே கன்னடத்திலும் உள்ளமை தமிழ்மொழியின் வடிவமைப்பு முறையையே(ORTHOGRAPHY) இந்தியமொழிகள் அனைத்தும் பெற்றுள்ளன! அஃதாவது, இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும், மொழி-வடிவமைப்பு என்னும் எழுத்தியல் முறை முற்றிலும் தமிழ் மொழியின் மொழி-வடிவமைப்பு முறையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் பொழுது கன்னட மொழிக்கான எழுத்தமைப்பு முறையும் தமிழ் வரிவடிவ முறைமையைப் பின்பற்றியே உள்ளது என்பது வியப்பல்ல. எனவேதான், தமிழ்த்தாயின் நெடுங்கணக்கு போன்றே கன்னடச் சேயிலும்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார் புலவர் கணி புன்குன்றனார், நற்றிணை 226.1-3 சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர். சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார். இலை, பூ, காய்,…
அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? -இலக்குவனார் திருவள்ளுவன்
அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? தமிழ், தனித்தியங்க வல்லது என்பது அதன் சொல் வளத்தால் மட்டும் அல்ல; நெடுங்கணக்காலும்தான். எனவே, பிற மொழிச் சொற்களை நீக்கித் (தனித்) தமிழ் இயக்கம் வெற்றி காண அயல் எழுத்து வடிவங்களையும் அறவே நீக்க வேண்டும் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அயல் எழுத்து வடிவம் என்று பார்க்கும் பொழுது பொதுவாக அயல் எழுத்தொலிகளைக் குறிக்கப்பயன்படும் கிரந்தம் நடைமுறையில் இருப்பதால்தான் பிற மொழிச் சொற்களை நாம் தங்கு தடையின்றிப் பயன்படுத்துகின்றோம். உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் தனித்தன்மையை நமக்கு உணர்த்திய அறிஞர் காலுடுவெல்; அதனை வழி மொழிந்து…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 3 செம்மை வழக்குகள் தமிழிலும் சிதைந்த வழக்குகள் பிற மொழிகளிலும் உள்ளன. தமிழ்ச்சொற்கள் செப்பமுற்ற நிலையிலும் தமிழ்க் குடும்ப மொழிகளில் உள்ள சொற்கள் சிதைந்த நிலையிலும் உள்ளமை குறித்துப் பின்வருமாறு பேரா.இலக்குவனார் கூறுகிறார். “இவ்வாறு எவ்வகையில் நோக்கினாலும் தமிழும், தமிழல் திராவிட மொழிகளும் ஒரு மொழி போலவே தோன்றுகின்றன. பெரும்பாலும் செப்பமுற்ற வழக்குகள் தமிழிலேயே உள்ளன. பிறமொழிகளின் சொற்கள், சிதைந்த வழக்குகளாகவே யுள்ளன. பண்பட்ட பழந்தமிழிலிருந்து பிரிந்து, நெருங்கிய தொடர்பு…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தொடர்ச்சி) தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 மூலத் திராவிட மொழி என்னும் கதை தமிழின் தாய்மையையும் முதன்மையும் தொன்மையையும் ஏற்க மனமில்லாத தமிழ்ப்பகைவர்களும் உள்ளனர். அவர்கள் தமிழில் இருந்து பிற மொழிகள் பிறந்த உண்மையை மறுத்துக் கதை அளக்கின்றனர். அதே நேரம், சிலர் தமிழின் தாய்மையை மறுக்கவும் இயலாமல் ஒத்துக்கொள்ளவும் மனமின்றி மூலத் திராவிட மொழி என்னும் கதையை அளக்கின்றனர். “திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக இருந்த மொழியை…
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் தமிழ் உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் கன்னடத்திற்கும் தாயாகத் தமிழ் இருக்கிறது என்பது சரிதானே! உலகப்பந்தில் ஓரிடத்தில் தோன்றிய மக்கள் இனம்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது. மக்கள் தோன்றிய இடத்தில் தோன்றிய மொழிதானே உலகமெங்கும் பரவியிருக்கிறது. அவ்வாறு பரவும் பொழுது காலச்சூழலுக்கும் இடச் சூழலுக்கும் ஏற்ப பல்வேறு மொழிகளாகத் திரிந்தன. அவ்வாறு திரிந்த மொழிகள் பிற திரிந்த மொழிகளுடன் சேர்ந்து மேலும் பலவேறு மொழிகள் தோன்றின. ஆகவே மொழிப்பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் மக்கள் பிறப்பு வரலாற்று அடிப்படையிலும் ஒரு மொழியில்…
97. சனாதன நூலாகிய அருத்த சாத்திரம் மக்கள் அனைவருக்கும் உரிய நூல் என்கிறார்களே! 98. அருத்த சாத்திரம் திருக்குறளுக்கும் மூத்த நூல் என்பது பொய்யா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 மார்க்கு மக்கினீசு என்னும் அறிஞர், ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’ எனக் கட்டுரை எழுதியுள்ளார்.(Is the Arthasastra a mourian document? by Mark Mcclish) இதில் அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து நூலல்ல, இதன் ஆசிரியராகக் கூறப்படும் சாணக்கியர் அல்லது கெளடில்யர் சந்திர குப்புத மன்னரின் அமைச்சர் அல்லர், அவருக்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சிலரால் தொகுக்கப்பெற்றது இந்நூல் என அவர் இதில் நிறுவியுள்ளார். அருத்தசாத்திரத்தைக் கெளடில்யன் என்பான்…
94. பிராமணர்களை மட்டும் உயர்த்திச் சொல்வதாகக் கூறுவது தவறானது என்கிறார்களே!+95. சனாதன நூல்கள் நல்ல கருத்துகளையே கூறவில்லையா? + 96. இடைச்செருகல் கருத்துகளைத்தான் பரப்புகிறார்களா?- இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 94-96 பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும் சோதியும் அவனை வெறுக்கும். பிராமணன் துன்புறுத்த(இம்சிக்க)த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான். பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அவ்வுணவு மீது ஆசை கொள்ளும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன்; அவன்அதைச் சீரணிக்க இயலாது. பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான். பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள். அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள். தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும உலகத்துக்குச்…
92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி) “எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148). “தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்” என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி. ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது. இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 : அன்றே சொன்னார்கள் 47 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 கட்டடவியலுக்கென்று இலக்கணம் வகுத்து அதற்கேற்ப பெரிதாகவும் அகலமாகவும் பல மாடிகள் உடையதாக உயர்ந்ததாகவும் பாதுகாப்பாகவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் வீடுகளைக் கட்டி இருந்தமையைப் பார்த்தோம். இவற்றின் தொடர்ச்சியாக மேலும் சிலக் குறிப்புகளைப் பார்ப்போம். நாம் இப்பொழுது வீட்டிற்குக் குளிர்ச்சி தேவை எனில், செயற்கையாகக் குளிர்கலன் வைத்துக் கொள்கிறோம். பண்டைக் காலத்தில் வீடு கட்டும் முறையிலேயே தேவையான குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் அறிவியல் வித்தையை…
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்
(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப்…
