திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௯. தமிழ்நாட்டில் வடமொழி .. .. பிறமொழி – தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின?
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௯. தமிழ்நாட்டில் வடமொழி – தமிழ் அகரமுதலி,ஆங்கிலம் – தமிழ் அகரமுதலி, பிறமொழி –தமிழ் அகரமுதலி ஏன் தோன்றின? தமிழ்நாட்டில் ஆரியர், ஆங்கிலேயர், பிறமொழிக்காரர் முறையே குடியேறியும், ஆட்சி புரிந்தும் வாழும்படி ஏமாளித்தமிழர்கள் விட்டுக் கொடுத்துவிட்டு வீண் காலம் போக்கியதே காரணம். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்று அயர்ந்து இருந்துவிட்டனர் அற்றைத் தமிழர். இற்றைத் தமிழர் பெரும்பாலாரும் அவ்வாறுதான் இருக்கின்றனர். ஆரியர்கள் தமிழ்நாட்டில் குடியேறி…
மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 இந்தி ஆதரவாளர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர்: 1) தூய இந்தி ஆதரவாளர்கள்:– தாண்டன், கோவிந்து தாசு, சம்பூர்ணானந்து, இரவிசங்கர் சுக்குலா, கே. எம். முன்சி ஆகியோர். 2) உருது கலந்த இந்துத்தானி ஆதரவாளர்கள்:- சவகர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத்து ஆகியோர். இந்தி, தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த திருவள்ளூர்…
அளவுக்குமீறிக் கொள்ளாதே! – சங்கப்புலவர்கள்பொன்னுரை 35: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி) சங்கப்புலவர்கள்பொன்னுரை– 35:அளவுக்குமீறிக் கொள்ளாதே! ”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்பொன்னுங் கொள்ளார் மன்னர்” நற்றிணை – 226. 1-3; பாலை ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர். சொற்பொருள் மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்; வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு,…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 34: ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! : இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்குநீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா! … பாடற் தலைப்பு: நிறம்திகழ் பாசிழை பதிற்றுப்பத்து 73 ; 21 அடி கொண்ட பாடலில் முதல் 3 அடிகள் பாடிய புலவர் – அரிசில் கிழார் பாடப்பட்ட சேரன் – பெருஞ்சேரல் இரும்பொறை கி.மு. காலத்துப் பாடல் துறை:…
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்!
முதல்வர் பொறுப்பேற்ற பொழுதே நடந்த முதல் பாராட்டுக் கூட்டம்! நேற்று ஞாயிறு 10.05.2026 காலை 10.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.சோ.விசய் முதல்வராகப் பொறுப்பேற்ற நிகழ்வு நடந்ததை அனைவரும் அறிவோம். நேற்று அதே நேரம் அவருக்குத் தமிழ்காப்புக் கழகம் சார்பில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதுவே முதல் பாராட்டுக் கூட்டம். அதுவும் தமிழ் அமைப்பு நடத்திய பாராட்டுக் கூட்டம். தமிழ்க் காப்புக் கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமையில் இக்கூட்டம் நிகழ்ந்தது. தேர்தல் கணிப்புகளையும் திணிப்புகளையும் பொய்யாக்கித் தன்னம்பிக்கையால்…
கொடைக்கானல் காந்தியின் சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்
சிவகங்கை இராமச்சந்திரனார் -நூலாய்வு 1. இன்றைய ஆய்விற்குரிய நூல், ‘சிவகங்கை இராமச்சந்திரனார்‘ என்பதாகும். கொடைக்கானல் காந்தியால் எழுதப் பெற்றது இந்நூல். இந்நூல் வரலாற்றின் வாயில், அரசியல் வரலாறு, தலைவர்களின் தலைவர், கொள்கை குணம் கோட்பாடு என்னும் 4 பிரிவுகளில் மொத்தம் 43 தலைப்புகளில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் எழுவரின் அணிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையான சூரியவனத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிவகங்கைஇராமச்சந்திரனார் பற்றிய கருத்தினக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்டுரை தலைமுறை வரலாறு; மூன்றாவது கட்டுரை வரலாற்றின் வரலாறு; நான்காம் கட்டுரை வணக்கத்திற்குரிய வாயில் காப்போன்; ஐந்தாவது…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும்
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௬. தமிழ்நாடும் தமிழும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை நனியும் நலிவுற்றுளது என்பது தெளிவு. ஏனெனில், தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள கடைகளின் பெயர்களும், தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழாயில்லை. தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுளரின் பெயர்களும் தமிழன்று. கோவில் வழிபாடுகளும் தமிழில் நடத்தப்படவில்லை. இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கையிலும் தமிழ் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் தமிழுக்குத்…
மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! “சினனே காமம் கழிகண் ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் வுடைமை தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து) அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்” பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 22, அடிகள் 1- 4 (பாடலின் மொத்த அடிகள் 38) பெயர் – கயிறுகுறு முகவை (14) துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்…
தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே!- இலக்குவனார் திருவள்ளுவன்
தாய், பங்குனி 30,2057/ஏப்பிரல் 13, 2026 சங்கப் புலவர்கள் பொன்னுரை – 31 தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! ‘கண்டவர் இல்’ என, உலகத்துள் உணராதார்,தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை. நல்லந்துவனார், கலித்தொகை : 125 : 1-4 நெய்தற் கலி இப்பாடல் 24 அடிகளையுடையது. முதல் 4 அடிகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பதவுரை: கண்டவர் இல்=பார்த்தவர் இல்லை; உலகத்துள்=உலகத்தில் உள்ளவர்கள்; உணராதார்=அறியாவிட்டாலும்; தங்காது=தொடர்புடையவர்களிடம் மட்டும் தங்கியிராமல்;…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௪. எழுக தமிழினமே!
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு ௪. எழுக தமிழினமே! தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அயல் மாநிலத்தார் பறித்துக் கொண்டன போக எஞ்சியுள்ள குறுகிய தமிழகத்தையும் அண்டையிலுள்ள கேரளம், கன்னடம், தெலுங்கம் மாநிலத்தார் தமிழ்நாட்டில் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளைத் தங்களுக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கே உரிய இடம் அளிக்கப்படாத போழ்து, சிறுபான்மையினராக வாழும் அயல் மாநிலத்தார் தங்கள் மொழிகளையும் பயிற்று மொழிகளாக்க முயல்கின்றனர். பெயரளவில் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௩. திராவிட நாடும் தேர்தலும்
(உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௩. திராவிட நாடும் தேர்தலும் சென்னை எசு.ஏ.ஏ. திடலில் நடந்த தமிழ் நாட்டுச் சட்டமன்ற (தி.மு.க.) க.து. கட்சி உறுப்பினர்கட்கு அளித்த பாராட்டுக் கூட்டத்தில் திரு. அண்ணாதுரை அவர்கள், “திராவிட நாட்டுக் கொள்கையை நாங்கள் விடமாட்டோம். அதனைச் சட்டமன்றிலும், நாடாளுமன்றிலும் தம்பிகள் வலியுறுத்தத் தயங்கமாட்டார்கள். முப்பத்து நான்கு இலட்சம் மக்கள் திராவிட நாட்டுக் கொள்கையை ஆதரித்தே எங்கட்கு வாக்குகளை வழங்கியுள்ளனர்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியுள்ளார்….
கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் இதழ்
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 30 **** “கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதைவிட இறப்பது மேல்” இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்தவை தாவென் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. – சாத்தனார், குறுந்தொகை 349, அடிகள் 5-7 தலைவி கூற்று திணை: நெய்தல் கொடைத்தன்மை குறித்த பண்பாட்டை உணர்த்துவது இப்பாடல் வரிகள். பொருள்: தாம் அடைந்த வறுமைத் துன்பத்துக்கு அஞ்சி, நம்மிடம் இரப்பவர்க்கு அவர் விரும்பிய பொருளையும் அவருக்குத் தேவையானவற்றையும் கொடுத்து, அதன்பின், அவர்களுக்குக் கொடுத்தவற்றைத் திருப்பித்…
