தமிழைச் சிதைக்கலாமா? இலக்குவனார் திருவள்ளுவன் நேர்முகம் – கவிமணி
நாள் வைகாசி 16, 2045, மே 30, 2014 பக்கம் 16 “தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்” என்னும் நிகழ்ச்சி நடந்ததைக் கேள்விப்பட்டோம். தமிழ்க்காப்புக்கழகம், மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறையுடனும் பிற தமிழ் அமைப்புகளுடனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி யிருந்தது. இது குறித்து மேலும் அறியத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனைச் சந்தித்தோம். அப்பொழுதுதான் இது சாதாரணமான கூட்டம் அல்ல! அபாயச்சங்கு ஒலிக்கப்பட்டுள்ளது எனப் புரிந்து கொண்டோம். அவரிடம் பேசிய விவரம் வருமாறு: தமிழுக்கான…
ஈழத்தாயே பொறுத்திடு! – துயிலகா
ஈழத்தாயே பொறுத்திடு, தாயகம் மீட்டெடுப்போம் சற்றே பொறுத்திடு! தமிழரை ஒழிக்கும் சிங்களத்தின் செய்கை, நீண்டகாலம் நீடிக்காது, நிலைத்து நிற்போம் தமிழர் நாம்! முள்ளிவாய்க்கால் முடிந்ததாம், போர் தீர்ந்ததாம், இலங்கை வென்றதாம், தமிழர்க்கு விடுதலையாம், ஆயினும் எம்வாழ்வில் தேற்றமில்லை, சுதந்திரமாய் வாழ இங்கு வழியும் இல்லை! சிங்களத்தின் குடிகள் சொகுசாய் எம் வீட்டினுள், நாங்களோ வாழ வழியின்றி வீதியில்! எம்பெண்களை வற்புறுத்தி இராணுவத்தில் வேலை, தாயாவதைக்கூட தடுக்கும் ஈரமற்ற இன ஒடுக்கம்! ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவின் நட்பில், அமெரிக்காவின் பார்வையிலோ இலங்கையில் சமாதானம்! கேட்பார்…
இடர்கள் தந்தபோதும்…,எம் இலட்சியத் தாகம் தீராது – ஈழப்பிரியன்
அன்று…., கோயில் மணி ஓசையிலும், குயில்களின் இன்னிசையிலும், மங்கள வாத்திய இசையிலும் , மலர்ந்திடும் எங்கள் காலை…., இன்று…, கூவி வரும் செல்(பீரங்கி) ஓசையிலும், பறை எழுப்பும் அவல வசையிலும் , ஐயோ …என்ற அலறலிலும், விடிகிறது எங்கள் காலை. யுத்தத்தின் வடுக்கள்…. அடுத்தவன் கை ஒன்றை எடுத்து தன் கையோ? என ஏங்கும் ஒருவன் அங்கே…! பிணமாய்க் கிடக்கும் ஒருவனுக்கு ……, அவன் குடலே மாலையாய் கழுத்தில் அங்கே…! தமிழன் அல்லவா…..? இறந்தும் அவன் பறவைகளுக்குத் தீனி தருகின்றான். பிணக்குவியல் அகற்ற அந்த…
முள்ளிவாய்க்கால்
எங்கள் தேவதூதுவனின் இறக்க முடியாத சிலுவையைப் போல் என் மனக்கிடங்கினுள்ளும் அமிழ்ந்து கிடக்கும் பளுவையும் என்னால் இறக்க முடிவதில்லை! ஓட ஓட விரட்டப்பட்டோம் ஒன்றின் மேலொன்றாய்ப் பிணமாய் வீழ்ந்தோம் வீழ்த்தி விட்டோமென்ற வெற்றிக்களிப்பில் இன்று நீ வீழ்ந்து கிடக்கின்றாய்! பார் விழிகளில் நீர் வழிய வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம் கொடி ஏற்றி, கொலு வைத்து குடம் நிறைந்தது போலநிறைந்த நிறைந்த எம் வாழ்வில் குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம் அகதிகளாகி! அழகுதமிழ்ச் சோறும் ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள் பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ புசிக்கின்றோம்…
ஓ நந்திக்கடலே! – மட்டு மதியகன்
பார்வைக்காக விடப்பட்ட போர்க்கருவிகள் பாரிலிருந்து வந்த இராணுவ மேதைகள் மலைத்துப் போயினர் கொள்ளிக்கட்டைகளாக அள்ளி அடுக்கப்பட்ட வித்துடல்களைச் சுமந்த இயந்திர வண்டி கொலைகாரக்கொடியவன் இளம் பெண்ணை இழுத்து வருகிறான் நிருவாணமாக வீரமாது வித்தாகி விழுந்து கிடக்கிறாள் படிந்த குருதியோடு ஈரேழு வயதான எங்கள் பாலகன் பசியால் ஏதோ சுவைக்கும் புகைப்படம் பிஞ்சி மார்பில் பஞ்சு ரவை வேட்டுககள் ஏந்தியபடி வீரமரணம் போர் வீரர்கள் அடுக்கப்பட்டுகிடக்கும் அநியாயமான காட்சி இறந்த மங்கையின் மார்பில் நல் குலம் பெறாத நாசிக்காரன் காலை ஊன்றிய புகைப்படம் உயிருக்காய்ப் போராடும்…
கனவோ நனவோ – கிரிசாசன்
கண் கொண்டு பார்க்கவே கூசும் – அக் காட்சிப்படங்களைப் பார்ப்பவர் நெஞ்சம் புண்பட உள்ளமும் நோகும் – தேகம் புல்லரித்தே கூட அச்சமும்கொள்ளும் விண்கண்ட ஓலங்கள் யாவும் – வான வீதியிலே எங்கும் கேட்பது போலும் எண்ணம் பிரமித்து நிற்கும் – அங்கே என்ன நடந்தது காணவிழைந்தேன் நட்ட நடுநிசி நேரம் – ஒரு நாளில் துணிவுடன் சென்றுமடைந்தேன் கொட்டும்மழை பெய்தபின்பு – பனி கூதலிடப் புகைபோலும் நிசப்தம் வட்டமதி மேலே நிற்க – அதன் வீசுமொளிதனில் சென்ற இடமோர் வெட்ட வெளிப்பிரதேசம் –…
தமிழர் நாம்! – துயிலகா
விளைந்த வயல்களில் வேர்களும் இல்லை வியர்வை சிந்தி உழைத்தவர் தடயமும் இல்லை மழைத்தூறல் பட்டால் மனம்கூட நிறைத்திடும் மண்வாசம் கொஞ்சமதைத் தோண்டினாலும் சற்றே பிணங்களின் படையெடுப்பு வீதிவழி கெந்தியாடிய சின்னஞ்சிறார் கையில்லை காலில்லை ஊனமானார் பட்டுச்சரிகையில் சொலித்த எம் ஈழத்தாய் விதைவைக்கோலம் தரித்தின்று மௌனித்தாள் காலகாலம் ஆண்டுவந்த எங்கள் பூமி போர்க்களமாய் மாறி நிலைகுலைந்ததின்று தமிழர் என்ற கோர்வைக்குள் நாமின்று தனித்தனியே செல்வதால்தான் பயனுமென்ன? ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு வேங்கை ஒன்றுதிரண்டால் போதும் காரிருளும் கலைந்தோடும்! ஒருவழி தமிழ்வழி நின்றிருந்தால் போதும் ஓடி ஒழிய…
அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி
தமிழர்களை அழிப்பேன் தமிழையும் அழிப்பேன் தணிக்கைகள் பல செய்வேன் தமிழ் இனத்தை தவி தவிக்கச் செய்து தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று தனி மனித உரிமைகளைத் தட்டிக் கழித்தான் தனி நாடு கேட்டோம் தத்துவங்கள் பல பேசி, தந்திரங்கள் என நினைத்து, தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!…. தமக்கென இருக்கிறான் ஒருவன் தக்க சமயத்தில் வருவான் தயக்கமென்ன தமிழா! தலை நிமிர்ந்து நில்லு தமிழ் இனத்தின் தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!…. http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614
பதுங்கு குழி
பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது பயத்தால் அல்ல.. உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க.. நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல.. எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..! நன்றி : மதுசூதனன் http://tamilmadu.blogspot.in/2011/09/blog-post_4489.html
ஈழத்தின் கண்ணீர்தானோ !
அலைகள் தழுவும் தேசத்தில் கொலைகள் தொடர்வதும் ஏனோ? விடுதலை வேண்டி வாழும் மாந்தர்க்கு உரிமை மறுப்பது தருமம்தானோ? நாற்புறம் சூழ்ந்த கடல் நீரினிலே உவர்ப்பை நிறைத்தது எங்கள் கண்ணீர்தானோ? – விக்கி http://eelamkavithaigal.blogspot.in/2009/12/blog-post_5528.html
முற்காலத்தில் – சுருதி (இளையவள்)
மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூனியமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து மீளவில்லை முள்ளிவாய்க்கால் முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383
முள்ளிவாய்க்கால் ஓரத்திலே – ஓவியா
விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவைச் சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களைச் சுமக்கிறது கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383
