புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் அறுசீர் விருத்தம்            1.     குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித்                  திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி                  மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி                  அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை;            2.     தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங்                  கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார்                 …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20  தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் மக்கட் படலம் அழுக்கற வெளுத்து வண்ண மாக்குவோர் வண்ணார் பின்னர்                  மழுக்குற மயிரை நொய்தின் மழிப்பவர் மழிப்பர் வாய்மை                  ஒழுக்குற வரிதி னோவந் தீட்டுவோ ரோவர் மற்றும்                  வழக்குறு தொழில்க ளெல்லாம் வகைப்படுத் தப்பேர் பெற்றார். பல்வகைப் பறையின் யாழின் பாகுசெய் குழலின் வாயிற்                  சொல்வகை யமையத் தாளத் தொகையுட னராகம் வாய்ப்ப                  நல்வகை யிசையுங் கூத்தும் நலம்பட விசைக்க மேலோர்                 …

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி) 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. 17. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. வேறு 18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம் ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும் தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே.   7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.    8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ.   9. முதலில் வெம்பசி மூளவே…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75

(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70

(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.   பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.61-65

(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   மருதம் தொடர்ச்சி   மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப் புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே. 62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்; வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக் கொழுக்கவுண் டலத்துப் போன குரக்கினம் பறித்துப்…

இலக்கியத்தின் எதிரிகள்  2/2: ம.பொ. சிவஞானம்

(இலக்கியத்தின் எதிரிகள்  1/2 தொடர்ச்சி) இலக்கியத்தின் எதிரிகள்  2/2 இராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். ‘பலதார மணம்’ என்ற தவற்றின் சிகரத்தில் தயரதனை ஏற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ஆத்திரப்படமாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார்.அவருடைய இரசிகத்தன்மையை என்னென்பது! இராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60

(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் மருதம். வேறு 56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும், முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும், நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும், மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும் ஏற்றினை யுகைப்பா ரேற்றி  னிகல்வலி…

இலக்கியத்தின் எதிரிகள்  1/2: ம.பொ. சிவஞானம்

இலக்கியத்தின் எதிரிகள்  1/2 ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும். பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால்…