விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 : இலக்குவனார்திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன் : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 7 வணக்கம் ஐயா. வணக்கம். வாங்க, வாங்க! இன்றைக்கு என்ன பார்க்கப் போகிறோம்? ஐயா, உங்கள் புதினத்தின் மையக் கருத்து வளரும் தலைமுறையினர் மூத்த தலைமுறையினரைப் போற்றிப்பேண வேண்டும் என்பதுதானே. ஆமாம். ஆமாம். கூட்டுக் குடும்பமே இல்லாமல் போன இக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தின் நன்மையைக் கருதிச் செயற்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் மூன்று அண்ணன் தம்பியரும் ஒரு தங்கையும் உள்ளனர். மேலும், இவர்களின் சித்தியும் இங்கேயே உள்ளார். அவருக்குக்…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 : இலக்குவனார்திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 6 பெரிய திரை என்று மட்டுமல்ல. சின்ன திரைக் கலைஞர்களையும் கதைகளில் வருவதுபோல் காட்சிகளை அமைத்து விடுவோம். அது மட்டுமல்ல.ஒரு தொலைக்காட்சித் தொடரையும் மற்றொரு தொடரையும் அல்லது மற்ற இரு தொடர்களையும் இணைத்து ஒன்றாகக் காட்டுவோம். தொலைக்காட்சித் தொடர்களை இணைத்துக் காட்டுவீர்களா? ஆமாம். வெவ்வேறு தொடர்களில் உள்ள கதைமாந்தர்கள் சந்திப்பது போலும் ஏதேனும் சிக்கல்களைச் சேர்ந்து அவிழ்ப்பதுபோலும் உதவிக் கொள்வதுபோலும் கதைகளை அமைப்போம். குடும்பத்தினர் சேர்ந்து விளையாடுவதாகவும் காட்சிகள் வைப்போம். பாட்டுக்குப்…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : இலக்குவனார்திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 மறுநாள்: உங்கள் கதைகளில் நீங்கள் விறுவிறுப்பிற்கு என்ன செய்வீர்கள் என்ற தெரிந்து கொள்ளலாமா? கண்டிப்பாகச் சொல்கிறேன். திடீரென்று ஒருவரைப் புகுத்துவோம். ஏன்? எதற்கு அவர் வந்தார் என்று பார்ப்பவர்கள் கருத மாட்டார்களா? அப்படியெல்லாம் இல்லை. மாறாக, அவர் குறித்த பரபரப்பு பார்ப்பவர்களிடம் தொற்றிக் கொள்ளும். முன்பே இறந்த போன ஒருவர் உயிரோடு இருப்பதாகக் காட்டுவோம். அடக்கம் செய்யப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட ஒருவர் எப்படி மீண்டு வருவார் எனப் பார்ப்பவர்கள் சிந்திக்க…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 வணக்கமுங்க ஐயா. காலையில் சாப்பிட்டீர்களா? அதெல்லாம் முடித்து விட்டேன். இன்று நம் வேலையைத் தொடருவோம். சரிதாங்க ஐயா. மாறன் மல்லிகை உடனே சேரக் கூடாது. அது பற்றிப்பேசப் போகிறேன். மாறன் மல்லிகை காதலுக்கு எதிர்ப்பு இருந்தாலும் சீக்கிரமே எல்லாரும் ஒத்துக் கொள்கிறார்கள் அல்லவா? ஆமாம். மரபு தழைக்க வேண்டும். உறவு வலுப்பட வேண்டும் என இவர்களின் காதலுக்கு ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் உடனே சேரக்கூடாது. பல தடைகளை மீறித்தான் சேர…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 3 ஆமாம். நீங்கள் மனப்பாடம் செய்வதுபோல் என் புதினத்தை நன்கு படித்துள்ளீர்கள். உங்களிடம் படமாக்கும் பொறுப்பை ஒப்படைப்பது மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இப்பொழுது உணவுப் பொருள்களில் செய்யும் கலப்படத்தை உணராமலும் உணர்ந்தாலும் தட்டிக் கேட்காமலும்தான் மக்கள் இருக்கின்றனர். அப்புறம் எங்கே மொழிக்கலப்பைத் தடுப்பார்கள் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இளைஞர்கள் பலர் நாம் தமிழ்த்தேசியர்கள் என்பதை உணர்ந்து செயற்பட்டு வருகிறார்கள். எனவே, தமிழ் அழிவிலிருந்து காப்பாற்றப்படும் என்று சிறிது நம்பிக்கை வருகிறது. இவற்றை…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 இன் தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 அடுத்த வாரமே குமணன் நட்சத்திர விடுதியில் விருதாளருக்கு என ஒரு சிறப்பு அறையை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம். எவ்வளவு நாட்களும் தங்கியிருக்கலாம் என்றனர். உணவு முதலிய எதற்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்றனர். ஐயா, நீங்கள் திரைக்கதை உரையாடலை எழுதியும் தரலாம். உங்களுக்கு ஓர் உதவியாளரை அமர்த்தியுள்ளோம். அவர் கணிணியில் தட்டச்சு செய்து தருவார் என்று ‘வி’ கதைக்குழுத் தலைவர்…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1-இலக்குவனார் திருவள்ளுவன்
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 விருது பெறுபவரை விருதாளர் என்பர். இவரோ தான் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தன் பெயரையே விருதாளர் என மாற்றிக் கொண்டவர். தான் சூட்டிய பெயருக்கேற்ப சிறுகதைகளுக்காகவும் புதினங்களுக்காகவும் நிறைய விருதுகள் பெற்றுப் பாராட்டு பெறுபவர். அண்மையில் இவர் எழுதிய ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ என்னும் புதினம் சிறந்த புதினத்திற்காக அனைத்து இந்திய விருதினைப் பெற்றது. இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘வி’ தொலைக்காட்சி நிறுவனத்தினர் இவரைப் பாராட்ட இவர் வீட்டிற்கு…
குவிகம் இலக்கிய வாசல், குறும்புதினப் போட்டி முடிவு அறிவிப்பு
குவிகம் குறும்புதினப் போட்டியில் வெளியீட்டிற்குத் தேந்தெடுக்கப்பட்ட குறும் பதினங்களிலிருந்து அரவிந்து சுவாமிநாதன் அவர்கள் அறிவிப்பார் நிகழ்வில் இணைய நுழைவெண் Zoom Meeting ID: 6191579931 – கடவுக்குறி passcode ilakkiyam அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84
(குறிஞ்சி மலர் 83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 77
(குறிஞ்சி மலர் 76 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 27 தொடர்ச்சி “ஏண்டா, முருகானந்தம்! இன்றே உன் வீட்டுக்கு நான் வந்தாக வேண்டுமா, அப்படி என்ன அவசரமப்பா?” என்று கேட்டான் அரவிந்தன். முருகானந்தம் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லத் தயங்கினாற்போல் நின்றான். அரவிந்தனுக்குப் புரிந்து விட்டது. “ஓகோ? உன் திருமண ஏற்பாட்டைப் பற்றி உங்கள் வீட்டில் பெரியவர்களிடம் எடுத்துச் சொல்லிச் சம்மதம் பெற வேண்டுமென்கிறாயா? இதை என்னிடம் சொல்லுவதற்கு வெட்கமென்ன வேண்டியிருக்கிறது? நான் வருகிறேனப்பா. இப்போதே வேண்டுமானால் புறப்படு” என்று விவரம் புரிந்து கொண்டதும் முகமலர்ச்சியோடு வருவதற்கு…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 69
(குறிஞ்சி மலர் 68 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 25 பொன்காட்டும் நிறம்காட்டிப்பூக்காட்டும் விழிகாட்டிப்பண்காட்டும் மொழிகாட்டிப்பையவே நடைகாட்டிமின்காட்டும் இடைகாட்டிமுகில்காட்டும் குழல்காட்டிநன்பாட்டுப் பொருள் நயம்போல்நகைக்கின்றாய் நகைக்கின்றாய்பண்பாட்டுப் பெருமையெலாம்பயன்காட்டி நகைக்கின்றாய். — அரவிந்தன் கோடைக்கானலிலேயே அழகும், அமைதியும் நிறைந்த பகுதி குறிஞ்சி ஆண்டவர் கோயில் மலைதான். குறிஞ்சியாண்டவர் கோவிலின் பின்புறமிருந்து பார்த்தால் பழநி மலையும், ஊரும் மிகத் தெளிவாகத் தெரியும். நெடுந்தொலைவு வரை பச்சை வெல்வெட்டு துணியைத் தாறுமாறாக மடித்துக் குவித்திருப்பது போல் மலைகள் தெரியும் காட்சியே மனத்தை வளப்படுத்தும். கண்ட கண்ட இடங்களில் எல்லாம்…
மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி ‘பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பருமாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துகளுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா‘ என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பருமாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த…