கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு-தொடர்ச்சி) பூங்கொடி மீனவனைப் பழித்தல்           என்றனன்; அவ்விடை இருந்தவர் ஒருவர் `நன்று நன்றடா! மரபினை நவிலக்                    கூசினை யல்லை! குலவுநின் மரபோ     125           ஏசலுக் குரியது! வேசியின் பிள்ளை! சாதி கெடுத்தவள் தந்தைசொல் விடுத்தவள் வீதியில் நின்றவள் விடுமகன் நீயோ எம்பெரு மரபை இகழ்ந்துரை கூறினை?                    வம்பினை விலைக்கு வாங்கினை சிறியோய்!’         130           என்றிவை கூறி ஏளனம் செய்தனர்;         மீனவன் வெஞ்சினம்           `பெரியீர்! ஏளனப்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 64 : கலை பயில் தெளிவு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு – தொடர்ச்சி) பூங்கொடி கலை பயில் தெளிவு           நன்மக விதனை நயந்து வாங்கியோன் தன்மனை யாளும் தாம்பெறு பேறெனக் கண்ணென மணியெனக் காத்து வளர்த்தனர்;                    எண்ணும் எழுத்தும் எழிலோ வியமும்    105           பண்ணும் பிறவும் பழுதிலா துணர்ந்தே செவ்விய நடையினன் செந்தமிழ் வல்லுநன் அவ்வூர் மக்கள் அறிஞன்என் றியம்ப,               கோவிலில் மீனவன்            வாழ்வோன் ஒருநாள் வானுயர் கோவில்                   சூழ்வோன் உட்புகச் சொற்றமிழ் கேட்டிலன்   110…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 63 : உடன் போக்கு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை- தொடர்ச்சி) பூங்கொடி உடன் போக்கு           என்னலும், மின்னலின் இடையினள் துவண்டு கன்னலின் மொழியாற் `கருத்துரை வெளிப்பட உரை’எனத், தலைவன் `உடன்போக்’ கென்றனன்;              `விரைவாய்! விரைவாய்! விடுதலை பெறுவோம்;     80           மீன்,புனல் வாழ வெறுப்பதும் உண்டோ? ஏன்உனக் கையம்? எழுவாய் தலைவா! நின்தாள் நிழலே என்பே ரின்பம்’ என்றவள் செப்ப, இருவரும் அவ்வயின்            ஒன்றிய உணர்வால் உடன்போக் கெழுந்தனர்;         85 தந்தையின் மானவுணர்வு           துன்றிருட் கணமெலாம்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 62 : பொன்னியின் செயலறு நிலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 : தந்தையின் சீற்றம்- தொடர்ச்சி) பூங்கொடி பொன்னியின் செயலறு நிலை           இந்நினை வதனால் ஏங்கி மெலிவது                கண்டனன் தந்தை; கடிதினில் இவள்மணம்    50           கண்டமை வேன்எனக் கொண்டுளங் கருதி முயல்வுழி, இச்செயல் முழுவதும் உணர்ந்த கயல்விழி இரங்கிக் கண்ணீர் மல்கிச் செயலறக் கிடந்தனள் மயலது மிகவே;  பொன்னி காதலனிடம் செய்தி கூறல்           இனைந்துயிர் மாய இடங்கொடா ளாகி 55           நினைந்தொரு முடிவு நேர்ந்தனள் மனத்தே; விடிந்தால் திருநாள் விரைவினில் அனைத்தும்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 61 :  தந்தையின் சீற்றம்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி) பூங்கொடி தந்தையின் சீற்றம்           மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத் தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த் `துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல               அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்!         30           நினைகுவை நீயிப் பழிசெய என்றே நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்! மேதியிற் கீழென மேலோர் நினைக்கச் சாதி கெடுக்கச் சதிசெய் தனையே!                 வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! 35 இற்செறித்தல்          …

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : மீனவன் வரலாறுணர்ந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி) பூங்கொடி 13. மீனவன் வரலாறுணர்ந்த காதை அடிகளார் கூறத்தொடங்குதல்  இசையியல் இயம்பும் ஏட்டுச் சுவடி வசையிலா நினக்கு வழங்கிய மீனவன் தன்றிறம் கூறுவென் தயங்கிழை! கேளாய், நின்பெரும் பணிக்கும் நீள்பயன் விளைக்கும்;                   குறியிடத்திற் காதலர்           நெல்லூர் என்னும் நல்லூர் ஆங்கண்       5           கழனி வினைபுரி களமர் குடிதனில் எழில்நிறை செல்வி இடுபெயர்ப் பொன்னி நல்லவள் ஒருத்தி, கொல்லுலைத் தொழில்புரி வில்லவன் என்னும் விடலை தன்னொடு           அறியாக்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைஇசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாதுவசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;`தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும்,                   தந்நல மறுப்பும், தகவும் வேண்டும்        105           இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே;       இருளும் தொண்டும்           விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்;            கழியிருள் அதனுள் கடந்தனன்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 12 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க                   மலையுறை யடிகள் மலரடி வணங்கிக்  5 பூங்கொடி நிகழ்ந்தன கூறல்           காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியின் பூரிப்பு  அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே! ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே ! தகப்பன் தாயெனத்  தகுவழி  காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!           உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்       135           கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல் –தொடர்ச்சி) பூங்கொடி எழுச்சி யூட்டல் அவரவர் மொழியில் உயர்பொருள் காணின்தவறறப் பெயர்த்துத் தாய்மொழிக் காக்கு!தாய்மொழி விடுத்துப் பிறமொழி விழைவோர்ஆய்வுரை கேட்கின் அவர்செருக் கடக்கு!பிழைபடத் தமிழைப் பேசியும் எழுதியும் 90பிழைப்போர்க் காணின் பேரறி வூட்டு!பழிப்போர் இங்கே பிழைப்போர் அல்லர்அழித்தேன் என்றெழும் சிறுத்தைகள் கூட்டம்நாட்டினில் பல்கிட நல்லுரை வழங்கு! குரைத்தால் அவர்தம் கொட்டம் அடக்கு! பொருள்நூல் உணர்த்தல் நல்கிய தாய்மொழி நாளும் வாழிய!எழுத்தின் இயலும் சொல்லின் இயலும் 100வழுக்களைந் துணர்ந்தனை! வாழ்வியல் கூறும்அகம்எனப் புறம்என வகைபெறு…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை-தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடி வருந்துதல் உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்நின்னலம் சிறிதும் நினையார் உளரே’என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி; தாமரைக்கண்ணி அறிவுரை உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்தமிழ்காப் போரென நினைப்பது தவறு; இருவகைப் பகை சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம் மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி; பன்மொழி பயிலெனல் ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!தெலுங்கு…