வெருளி நோய்கள் 1206-1210 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1201-1205 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1206-1210 தள்ளுவண்டி/பிள்ளைகளை உலாத்துவதற்கு அழைத்துச்செல்லும் உலாவண்டி(stroller) குறித்த வரம்பற்ற பேரச்சம் தள்ளுவண்டி வெருளி.உலா வண்டி என்றால் சுற்றுலாவிற்குச்ச செல்வதற்குரிய மகிழுந்து எனத் தவறாகக் கருதலாம் என்பதால் அதனைக் குறிக்கவில்லை. அதுபோல் தள்ளுவண்டி என்றால் சுமைகளைத் தள்ளிச் செல்ல உதவும் வண்டி என்று கருதக்கூடாது.00 தற்காப்புக்கலை(karate)பற்றிய தேவையற்ற அளவுக்டந்த பேரச்சம் தற்காப்புக்கலை வெருளி.தற்காப்புக் கலையில் ஈடுபடுவோர் தங்களின் கவனக் குறைவாலோ போதிய தேர்ச்சியின்மையாலோ தாக்குதலுக்கு உள்ளாகலாம் எனப் பேரச்சம் கொள்கின்றனர். தற்காப்புக்கலையில் ஈடுபடுபவர்களைப் பார்ப்பவர்களும் தேவையின்றிப்…
வெருளி நோய்கள் 1201-1205 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1196-1200 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1201-1205 தள விளக்குகள் மீதான தேவையற்ற பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் குறித்து இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. விளக்குகள் மீது வெருளி உள்ளவர்களுக்குத் தள வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : தொடர்ச்சி) திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 2 சுருக்கத் தலைப்புகள் இதற்கிணங்க மேற்குறித்த இருபது தலைப்புகளையும் – ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உள்ளவற்றை – இணைத்துப் பின்வரும் தலைப்புகளி்ல் காணலாம். கல்வி தமிழ்வழிக்கல்வியும் இல்லை; தமிழ்மொழிக் கல்வியும் முதன்மை நிலையில் இல்லை என்பதே தமிழ்நாட்டின் துன்பமாகும். ஆங்கிலவழிக்கல்வியின் துன்பத்துடன் இந்தி, சமசுகிருதம் முதலான மொழிகளை முதன்மொழியாகப்படிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுத் தமிழ் கற்பிக்க…
வெருளி நோய்கள் 1181-1185 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1176-1180 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1181-1185 தம்பா(Tampa) மாநகரம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் தம்பா வெருளி.ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தம்பா மாநகரம் உள்ளது. இம் மாநிலம், மாநில மக்கள், விளைபொருள்கள், பழக்க வழக்கங்கள், தொடர்பானவை குறித்துக் காரணமற்ற பேரச்சம கொள்வர் இத்தகையோர்.00 தராசு தொடர்பிலான அளவு கடந்த பேரச்சம் தராசு வெருளி.தராசு நிறைகோல் என்றும் துலாக்கோல் என்றும் அழைக்கப் பெறும்; தட்டுத்தராசு, வில் தராசு, மின்னணு தராசு, வேதியல் தராசு எனப் பலவகைப்படும். தராசுகளில் மோசடி செய்து எடையைத்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08: வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் : இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 07: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 08 வீட்டிலும் ஏட்டிலும் தமிழைத் தொலைக்கும் நாம் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். அதற்குத், “தமிழை என்றும் உளதாகச் செய்வதற்கு அதனை மக்களுக்குப் பயன்படும் மொழியாக ஆக்குதல் வேண்டும். பயன்படு மொழியாகுங்கால் வீட்டிலும், ஊரிலும், நகரத்திலும், நாட்டிலும், உலகத்திலும் அதனை விரும்பிக் கற்குமாறு செய்தல் வேண்டும்”. என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 284). ஆனால், இன்றைய…
வெருளி நோய்கள் 1171-1175 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1166-1170 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1171-1175 தண்ணீர்ப்பூசணி(Watermelon) பற்றிய அளவு கடந்த பேரச்சம் தண்ணீர்ப்பூசணி வெருளி.தண்ணீர்ப்பூசணி, ஆப்பிரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகைப்பழம், கோசாப் பழம், தர்பீசு, தண்ணீர்ப் பழம் எனவும் அழைக்கப்படும். பூசணியைப் பூசுனி, பூசனி என்றும் குறிப்பிடுவர்.00 தந்தையுடன் பிறந்த தமக்கை, தங்கை ஆகிய அத்தைமார் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தந்தை உடன்பிறந்தாள் வெருளி.அத்தை என்று சொன்னால், தாயுடன் பிறந்த உடன்பிறந்தவரின் மனைவி என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே,…
வெருளி நோய்கள் 1156-1160: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1156-1160 சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.00 சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற பேரச்சம் சோளத் தோசை வெருளி.சோள வெருளி உள்ளவர்களுக்குச் சோளத்தோசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.Tortilla என்னும் இசுபானியக்கூட்டுச்சொல்(தோசை என்னும் பொருள் கொண்ட tort(a) + மென்மை என்னும் பொருள் கொண்ட ஒட்டுச்சொல் illa)…
இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் பொதுத்தலைப்பு: இன்றைய மன்பதைச் சிக்கல்களும் தீர்வுகளும் – நிறைவுரை 1 அன்புள்ள அவையோருக்கு வணக்கம். “இன்றைய மன்பதைச் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும்”என்னும் பொதுப்பொருண்மையில் 22 தலைப்புகளில் இதுவரை உரையாற்றி உள்ளனர். இன்றைய மன்பதையை ஆட்டிப்படைக்கும் சிக்கல்களைத் தேர்ந்தெடுத்துக் கவிஞர் செவ்வியன் தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவிஞர் செவ்வியன் இப்பொழிவுகளில் இடம் பெற்ற தலைப்புகளில் முன்னரே உரை ஆற்றியுள்ளார் அல்லது எழுதி உள்ளார். எனவே, தாமே முழுமையாகப் பேசக்கூடிய கருத்தாழம் உள்ளவராக இருப்பினும்…
வெருளி நோய்கள் 1146-1150: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1141-1145: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1146-1150 சேகா நிறுவனத்தின் காணாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேகா காணாட்ட வெருளி. சேகா என்பது சப்பானின் தோக்கியாவில் உள்ள சினகாவா(Shinagawa) நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் காணாட்ட நிறுவனமாகும்.Service Games என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கமே சேகா (Se Ga)என்பது.00 சேடன் மகிழுந்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சேடன் வெருளி.உட்கார் என்னும் பொருள் காெண்ட “sedere” என்னும் இலத்தீன் சொல்லில் இருற்து உருவானதே “sedan”. அமர்ந்து செல்வதற்கு வசதியானது என்பதை உணர்த்தும் வகையில் இம்மகிழ்வுந்து…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 1 : தொடர்ச்சி) இலக்குவனார் மொழிப்போர் நூற்கலைஞர் நிவேதிதா உலூயிசு எழுதிய ‘1938 முதல் மொழிப்போரில் பெண்கள்’ நூலாய்வு 2 இந்தி எதிர்ப்பு, பெரியார், தன்னாட்சி வருமாயின் தன்மொழியும் வேண்டாவோ, தமிழ்நாடு தமிழருக்கே ஆகிய நான்கு அம்மானைப்பாடல்களுடன் நூலைத் தொடங்கியுள்ளார். முதல் கட்டுரையான அறிமுகத்தில் இவற்றைக் காணலாம். வீட்டுச் சிறையில் இருந்த பெண்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக்களத்தில் இறங்கிச் சிறை புகுந்ததை இந்நூல் கூறுகிறது. உலகெங்கும் வாக்குரிமை, அதிகாரம், சம ஊதியம் தொடர்பில் ஏற்பட்ட பெண்கள் எழுச்சியையும்…
வெருளி நோய்கள் 1141-1145: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1136-1140: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1141-1145 செவ்வாய்க் கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் செவ்வாய்க் கோள் வெருளி.கணியம் அல்லது சோதிடம் என்பது உண்மையானால் செவ்வாய்க்குரிய நற்பலன்கள் மீதும் நம்பிக்கை வரவேண்டும்.ஆனால் பணத்தைக் கறப்பதற்காகச் “செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய்த் திசை வந்தால் துன்பங்களும், இன்னல்களும் நேர்ச்சிகளும்(விபத்துகளும்) வந்து சேரும்” என்றும், “செவ்வாய்க் கோளானது அது அமர்ந்த வீட்டுக்கும் அது தொடர்பு பெற்றிருக்கும் இடங்களுக்கும் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்” என்றும் சொல்கின்றனர். இதற்குக் கழுவாயாக/பரிகாரமாக ஏதேனும் செய்வதாகச் சொல்லிப் பணம்…
உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! – திருத்துறைக் கிழார்
(க. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் – தொடர்ச்சி) தமிழ்நாடு உ. இந்த அடிமை வாழ்வு தேவைதானா? எண்ணிப் பார் தமிழகமே! தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை, அமைச்சரவை பெயரளவில்தாம். தமிழ்நாட்டிற்குகந்த சட்டங்கள் தொகுத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லையே! இந்திய தரப்பு, பாரத நடுவணரசுக்கு அனுப்பி தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தலாம்.தமிழக அரசு இந்திய அரசின் போக்குக்கு மாறாகச் செயல்பட்டால், உடனே கலைக்கப்படும். இப்படித்தான் நான்கு முறை தமிழ்நாட்டரசு கலைக்கப்பட்டது.தமிழக அரசு தில்லி அரசின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்படுகிறதா? என்று கண்காணிக்க நடுவணரசு ஓர் ஆளுநரை அமர்த்தியுளதறிக.தமிழ்நாட்டில்…
