சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 17

பெண்மகளும் பெட்டகமும் 

 வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும்

தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப்

பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே !

வெல்மகளும் பெட்டகமாய் வீடு.

 பொருள்: பெண் மகள்:

| ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர்.

2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் .

3) தூய்மையாக இருப்பார்கள்.

4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர்.

5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்று பல நிலைகள் கொண்டிருப்பர்.

பெட்டகம்:

1 எந்நேரமும் மூடியே இருக்கும்.

2 வாய்(கதவைத் ) திறந்தால் உள்ளிருக்கும் அரும்பொருள் காட்டும்

3 . தூய்மையான ஆடைகளை உள்ளே வைத்திருக்கும்.

4) உள்ளிருக்கும் பொருட்களைத் தாங்கும் .

5) பல அடுக்குகளைப் பெற்றிருக்கும்.

எனவே பெண் மகளும் பெட்டகமும் ஒன்றாகும்.

 

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி

                    கட்டிக்குளம்
                  ஒ .சுந்தரமூர்த்தி

 

நன்றி : பெண் படம் :  ஓவியர் இளையராசா