(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240

(குறள்நெறி) 

  1. (பசி தாங்கும் துறவியைவிட) வலிமையாகத் திகழப் பசியைப் போக்கு!
  2. பொருளைச் சேமிக்க, இல்லாதவர் பசி தீர்!
  3. பசிப்பிணி அண்டாதிருக்கப் பகுத்துண்!
  4. கொடை  இன்பத்தை உணராமல் பொருளைச் சேர்த்து இழக்காதே!
  5. இரத்தலைவிட இழிவாகத் தனித்து உண்ணாதே!
  6. கொடுக்க முடியாத பொழுது இறப்பதும் இனிமையே என உணர்! 
  7. கொடுத்துப் புகழ் பெறுவதே உயிர்க்கு ஆக்கம் என அறி!
  8. (அனைவராலும் பேசப்படக்) கொடுத்துப் புகழ் பெறு!
  9. உலகில் அழியாத புகழை அடையச் செயல்படு!
  10. புகழால் வரும் கேட்டையும்  இறப்பையும் பொருட்படுத்தாதே!

 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250]