(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

(குறள்நெறி)

81.அன்பில்லாதவருடன் வாழாதே!

82.புறத்துறுப்புகளால் பயன் வேண்டுமெனில், உள்ளுறுப்பாம் அன்பு கொள்!

83. அன்பில்லாமல் உயிரிருந்தும் பிணமாகாதே!

84.விருந்தினரைப் போற்றி இல்வாழ்க்கை நடத்து!

85. சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க.

86. விருந்தோம்ப இயலாது வறுமையாளனாகாதே!

87. விருந்தினரைப் போற்றி வருந்தாமல் வாழ்!

88. வீட்டில் திருமகள் வாழ, விருந்தோம்பு!

89. விருந்தினர் உண்டபின் உண்!

90. தேவையெனில், விருந்தினர்க்கு விதையையும் உண்பி!

 

(தொடரும்)

இலக்குவனார்திருவள்ளுவன்