எங்களுக்காக உழைப்பார் உண்டோ!?

உழைத்தோம்

உழுதோம்

உணவின்றி

வாடுகிறோம்

 

உழைத்தோம்

நெய்தோம்

துணியின்றி

ஏங்குகிறோம்

 

உழைத்தோம்

கட்டினோம்

வீடுஇன்றி

அலைகிறோம்

 

உழைத்தோம்

பிறருண்ண

பிறருடுக்க

பிறர்வசிக்க

 

எங்களுக்கு

எல்லாம்

கிடைக்க

உழைப்பார்

உண்டோ!?

இலக்குவனார் திருவள்ளுவன்