தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார் – சுப.வீ.
தன்னையே எரித்து வெளிச்சம் தந்த பெரியார்!
விளக்கை ஏற்றி
வெளிச்சம் தந்தவர்கள் உண்டு
நீயோ
உன்னையே எரித்து
வெளிச்சம் தந்தாய்!
எங்களுக்கு நீதான்
எழுதவும் படிக்கவும் அடித்தளமிட்டாய்!
நாங்களோ இன்னும்
நன்றி சொல்லவே கற்றுக்கொள்ளவில்லை!
எங்களுக்காகவே
நீ வாழ்ந்தாய்!
மன்னித்துவிடு தந்தையே!
நாங்களும்
எங்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
– சுப.வீ.
சுப.வீ.வலைப்பூ
Leave a Reply