வியத்தகு மில்லறம் – பரிதிமாற்கலைஞர்
விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம்
ஒழுக்க வியலறி வறுத்துஞ் சாலையாய்
நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி
மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே
ரன்பு காய்த்துநல் லருள்கனிந் தலகிலா
இன்பநறை பிலிற்று மினியகற் பகமாப்
இலகிடு முண்மை மலையிலக் கன்றே
ஏத்துறுந் தகைய இல்லற மெனுமிம்
மாத்துடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ்
செலுத்தபு துன்பந் தீயரை யெறிந்து
தொலைத்திட லறியார் துறவு துறவென
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
மயக்கினு மாழ்கலீல் மாந்தர்கள்!
உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினோ,
– பரிதிமாற்கலைஞர் : தனிப்பாசுரத்தொகை
Leave a Reply