காவியச் சதுக்கம் – கவிஞர் தமிழவன்
கல்லறை தின்றதோ
எங்கள் மறவரை
களங்கள் தேடுதே
அந்த வீரரை
நிலத்தில் இடியான
எங்கள் சோதரை
கண்ணிவெடிகள்
மறக்குமா புதைத்த மாதரை
விடிவு ஒன்று தான்
எம் மண்ணின் மூச்சு
விடியும் வரையும்
இல்லை வாய்ப்பேச்சு
தமிழர் என்பதே
தலைவிதி ஆச்சு
என்று சங்கை ஊதியே
களம் சேர்ந்தாச்சு
முப்படை என்பதே
உலகின் வழக்கம்
நாற்படை கண்டது
புலிகள் இயக்கம்
பகையின் தலையில்
இடிகள் முழக்கம்
அது கரும்புலி என்றொரு
காவியச் சதுக்கம் ……..
நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196388&pidp=212278









Leave a Reply