eezham-genocide33

தமிழ்த்தாயே

மரம் தாங்கும் மண்ணாய்

இலை தாங்கும் மரமாய்

 

காய் தாங்கும் கொடியாய்

சேய் தாங்கும் தாயாய்

 

நீயே தாய்

நாங்கள் சேய்

 

ஈழத்தின் முடிவிலா

கொலைகள் கண்டு

முடியாமலே போகிறது

உன் இரங்கற்பா.. !

 

ஈழத்திற்காக இறந்தவர்கள்

எல்லாரும்

சிதை சிதைந்து போகவில்லை

விதை விதைத்துப் போயிருக்கிறார்கள்…!

     

eezham-salute01  – விக்கி

நன்றிஈழம்கவிதைகள் வலைத்தளம்

http://eelamkavithaigal.blogspot.in/