குளறுபடி நீங்கக்

          குறள்படிக்க வாங்க! – மின்னூர் சீனிவாசன்

 

 

குறள் வெண்பாவின் நடையே – நமக்குக்

கொடுக்கும் கருத்துப் படையே!

அறமும் புதிதாய்க் கொண்டு – வேல்

அரசு உரைத்தார் விண்டு!

 

ஆழ்ந்து படிப்போம் நூலை – நம்

அறிவுக் கூர்மை “வேலை”

சூழ்ந்த தோழர் எடுப்பார் – மடமைத்

தொல்லை தீரத் தடுப்பார்!

 

சாதிச் சழக்கும் இன்றி – மதம்

சார்ந்த வழக்கும் இன்றி

நீதி மனித நேயம் – தோன்றின்

நிகழும் மனத்தில் மாயம்!

 

நேர்மை நெருப்புப் பெரியார் – எளியோர்

நீடு போற்றர்க் குரியார்!

கூர்மை யாய்நற் கருத்தும் – மொழியில்

கொழிக்கும் மதியை நிறுத்தும்!

 

கூரிதான எண்ணம் – இனி,

கொள்கை முழக்கம் பண்ணும்!

நேரிதான முரசு – அடித்தார்

நிகரிலா வேலரசு!

மின்னூர் சீனிவாசன்