இந்தி தெரியாது போடா! – ஆற்காடு க.குமரன்
இந்தி தெரியாது போடா! என்றியம்பிட வழி இல்லை தோழா! எங்கு காணினும் ‘ஜி’…….. ஒலிக்கிறது 4’ஜி’ 5’ஜி’ ஆள மயக்குது மக்கள் மத்திய அரசை நம்பவில்லை நம்பாமல் மந்திரிகள் பதவியே இல்லை ஆளும் வருக்கம் ஆடிப் போய்க் கிடக்கிறது நாளும் வழக்கு கூடிப்போய் மிரட்டுது வயிற்றுப் பிழைப்புக்கு வந்த வடக்கிந்தியன் வாயிலாக தென்னிந்தியா முழுதும் தறி கெட்டுத் திரிகிறது இந்தி இந்தி தெரியாது போடா என்றியம்பிட வழி இல்லை தோழா பணியாற்ற வந்தவனிடம் பண்டம் விற்க வழக்கு மொழியாய்…
கனவு நனவாக! – ஆற்காடு க. குமரன்
கனவு நனவாக என் மொழி ஆட்சி மொழி என்று அரசாணை வெளியிட்டது எங்கு காணினும் என் மொழி பெயர்ப்பலகைகளில் ழகரம் யகர ஒலிப்பின்றித் தமிழனின் நாக்கில் தவழ்ந்தது தலை நகர் கிளை நகர் அத்தனையிலும் தலைமையானதென் தமிழ் மொழி வணிக மொழிகளில் கூட வலிமையானது என் தமிழ் மொழி வீதியில் நின்ற விவசாயிகள் வீட்டுக்கு வந்தனர் நாட்டினர் விருந்தோம்பலுக்கு விதையிட்டனர் நாடாளும் மன்னர் எல்லாம் நல்லவனாயினர் வழக்கு மன்றங்கள் எல்லாம் வழக்கின்றி வலு விழுந்தன காவல்துறை எல்லாம் ஏவல்…
ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்
ஐந்தறிவின் அலறல் நேர்ந்து விட்டால் போதும் நான் எங்காவது வாழ்ந்து விட்டுப் போவேன் பலி கொடுக்கிறேன் என்கிறான் கிலி பிடிக்கிறது எனக்கு பேரம் இவனுக்கும் கடவுளுக்கும் சோரம் போவது என் உயிர் நீரைத் தெளித்தால் நிச்சயம் தலையாட்டும் எல்லா உயிரும் மௌனம் சம்மதம் மனிதனுக்கு மட்டும் தானா? மௌனமாய் இருந்திருக்கலாம்… மஞ்சள் நீரைத் தெளித்ததால் மண்டையை மண்டையை ஆட்டியது மரணத்திற்கு வழிவகுத்தது சாதி மத பேதம் பார்ப்பதில்லை சாப்பிடுவதில் மட்டும் அவனிடம் வரம் பெற அறுபடும் …
இடைத்தரகன் விலை உரைப்பான் – ஆற்காடு க. குமரன்
இடைத்தரகன் விலை உரைப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். . . . அன்று! விதை விதைத்தவன் விலை மறப்பான் இடைத்தரகன் விலை உரைப்பான். . . . இன்று! விதை விதைத்தவன் வதைபட வகுத்த விதியில் மாற்றான் சதை கூட இதையெண்ணியுகுத்த கண்ணீரில் முளைக்குமோ விதைகள் யாவும் உப்பு நீரன்றே உழைப்பின் வியர்வைத் துளியும் விதைத்தவனே விலை கூறல் வேண்டும் சகதியில் உழல்கையில் தொடர்பு இல்லை ஏற்றம் இழுக்கையிலும் நீரேற்றம் இல்லை எட்டு வழிச்சாலை வயல்கள் எல்லாம் வழிப்பறியில்…
இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்
ஆற்காடு க. குமரன் இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள்! இரவினில் விடுதலை பெற்றன என் ஆடைகள் விடியலில் விடுதலை பெற்றது என் உலகம் அடக்குமுறையும் ஆணாதிக்கமும் ஒவ்வொரு நாளும்…. அத்தனையும் அரை மணி நேரம்….அ…..இம்சை தான் ஒவ்வொரு நாளும் அயல்நாட்டு முதலீடுகள் பொருளாதாரம் உடலையும் உயிரையும் தவிர வேறில்லை உடலே மூலதனம் உழைக்க வழி இல்லை ஓரிடத்திலும் உண்மை இல்லை பெண்மை நான் மட்டுமே உண்மை சூடு சொரணை இல்லை கூச்சம் வெட்கம் மானம் இல்லை ஆள்பவனுக்கே இல்லை அடிமைக்கு…
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! – ஆற்காடு க குமரன்
வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள். நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா? எதையும் வெளிக்காட்டாமல் நான். உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன். என்னை வைத்து எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் இரண்டு விழிகளாகப் பாருங்கள். அதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு காட்சியாகத் தெரியும். அண்மைக் காலத்தில் நிறைய மாணவர்களின் தற்கொலைகள். இவர்கள் எல்லாம் தோல்விக்காகத் துவண்டவர்கள்…
திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! -ஆற்காடு க குமரன்
திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை! ஈரடியில் உலகளந்த திருக்குறளுக்கு ஈடில்லை ஒரு குரலும் ஈரேழு உலகில் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள் அகழ்வாராய்ச்சியில் அகப்படுவதே ஆதாரங்கள் மண்ணில் எழுத ஆரம்பித்து மரங்களில் இலைகளில் பாறைகளில் பதிந்த தென்மொழி! என் மொழி! உணர்வுகளிலெல்லாம் உறைந்திருக்கும் உதிரத்தில் நிறைந்திருக்கும் உயிரினில் கலந்திருக்கும் இல்லாததேதுமில்லையதில் சொல்லாதது யாதுமில்லை செல்லாத ஊரூமில்லை செவி சாய்க்கா யாருமில்லை கல்லாத உயிருமில்லை வாய்க்காத பேறுமில்லை வாசிக்காது யாருமில்லை நேசிக்காத உயிருமில்லை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!…
மணம் ஆகாமலே மணவிலக்கு! – ஆற்காடு.க.குமரன்
மணம் ஆகாமலே மணவிலக்கு! நினைவுகளைக் காவலுக்கு வைத்துவிட்டு நீயெங்கு சென்றாயடி…….? நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளால் உழலுகிறேன் நீங்காது….. காவல் காக்கும் உன் நினைவுகள் கல்லறை வரை காத்திருக்கின்றன மீட்க வரவில்லை மீளாத்துயரில் ஆழ்கின்றன! நினைவுகளை அடைமானம் வைத்து விட்டு வெகுமானம் தேடி நீ சென்றது காதலுக்கு அவமானம! நினைவுப் பிள்ளையோடு கைம்பெண்ணாய் காத்திருக்கிறேன் மணம் ஆகாமலே மணவிலக்கு பெற்ற நீ விரும்பிய காதலன்!. இவண் ஆற்காடு.க.குமரன் 9789814114
இந்துக்களே காரணம்! – ஆற்காடு.க.குமரன்
இந்துக்களே காரணம்! திருச்சோற்றக்காகத் திருவறையைச் சுற்றுவது கழுவாய் தேடி திருவறையைச் சுற்றுவது இந்து மதம் அழிய இந்துக்களே காரணம்! இந்துக்குள்ளும் பிரிவினை சைவம் வைணவம்….. அதிலும் பிரிவினை சாதி…… இந்துக்களை இந்துக்களே கீழ்ச் சாதிக்காரன் என இழிவாய் எண்ணி இறைவன் திருக்கோவில் நுழையத் தடை செய்தது முதல் குற்றம். தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் ஆனால் தூங்கிக்கொண்டிருப்பான், ஏங்கித் தவிக்கும் ஏழையை மறந்து! சிவனுக்குக் கண் கொடுத்த கண்ணப்பர் எந்தச் சாதி…….? சத்தியம் இருந்தபோது எல்லாம்…
நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் – ஆற்காடு க.குமரன்
நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் காலன் வீசும் பாசக்கயிற்றைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிக்க முயலும் மருத்துவத்துறைக்கு மனமார நன்றி!. கூலிக்கு மாரடிக்கவில்லை புரிகிறது…………கூலி வாங்கிட இருப்போமா தெரியவில்லை!?. மயானம் நிரப்பும் போராட்டம் தியானம் புரியும் கிருமிகள் சயனம் மறந்த மருத்துவம் சகலமும் கல்வி மகத்துவம் நலவாழ்வுத்துறை மட்டுமே சுழலச், சுருண்டு போயின பல துறைகள் எல்லாம் தனித்திருக்க தன்னை யிழந்த மனிதனோ படித்துறையில் கடவுள் கல் எனப் புரிகிறது! மனிதம் புனிதம் ஆகிறது நோயைத் தீர்க்க…
பசியும் கிருமியே! – ஆற்காடு க. குமரன்
பசியும் கிருமியே! மகுடை கொடிய கிருமிதான் தொற்றுமுன்னே தொல்லைகள் ஆயிரம் தனிமைப் படுத்தப் படுவதே பெரிய தண்டனை முடங்கிக் கிடக்க சொல்வது முழு தண்டனை அடைந்து கிடக்க சொல்வது ஆயுள் தண்டனை நடுவண் அரசு நகராதே என்றது மாநில அரசு வழி மறித்தது வணிக உலகம் வாடியது தொழில்துறை தூங்கியது பசி மட்டும் தீராமல் பஞ்சப்பாட்டு பாடியது. அடுத்த வேளை உணவின்றி வெறும் கையைத் தட்டி ஓலமிட வேண்டா என்று ஓசை எழுப்பச் சொன்னது மணியாட்டி க்…
மகுடைக்குக் காலன்! – ஆற்காடு க. குமரன்
மகுடைக்குக் காலன்! தனித்திருக்கிறேன் விழித்திருக்கிறேன் பொறுத்திருக்கிறேன் வெறுத்திருக்கிறேன்! காலனாக வரும் மகுடைக்குக் காலனாகக் காத்திருக்கிறேன்! என்னைத்தொற்றும் நோய்மி என்னோடு அழியட்டும்! என் உயிரைக் குடிக்கும் அதன் உயிரைக் குடிக்கிறேன் நான்! என் தலைமுறைக்காக என் தலை வீழத் தயங்கேன்! என்னுயிரோடு இந்நோய்மி இறக்குமாயின் மண்ணுயிர்க்கிரையாய் மாண்டிடத் துணிகிறேன்! மகுடையைக் கொல்லத் தனித்திருப்போம் விழித்திருப்போம் காத்திருப்போம்! இவண் ஆற்காடு க. குமரன் 9789814114