48. சனாதனம் யாருக்கும் எதிரி கிடையாது – அண்ணாமலை 49. திருப்பாணாழ்வார் கோயிலில் நந்தி சிலை விலகியிருப்பதே சனாதனம் – அண்ணாமலை 50. சனாதனம் அனைத்து மதங்களிலும் உள்ளது – தினகரன். -யாவும் பொய்யே – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 48-50 ? “திருப்பாணாழ்வார் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். ஏன் இப்படி விலகி இருக்கிறது? ஒரு கீழ்ச் சாதியை சேர்ந்த மனிதர் சிவனைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரது சாதியைக் காரணம் காட்டி அவருக்கு அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனின் நந்தி (காளை), தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று உட்கார்ந்து கொண்டு, அந்த மனிதர் சிவனைப் பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தருமம்” என்று அண்ணாமலை…
45. இந்து மதம் எல்லாரையும் அரவணைக்கிறது. – நீதியர் நாகரத்தினா 46. “இந்தியா சனாதனத்தின்படி தான் இயங்குகிறது” – ஆளுநர் இரவி 47. கோயிலுக்குத் தூய்மையாக வரவேண்டும் என்று கூறுவது தவறா? – இவை பொய்யான வாதங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” .என்றார். (தெள்ளேணம் என்பது கை கொட்டிப் பாடிக்கொண்டே ஆடும் ஆட்டம்) இன்றும் இந்த நிலை தொடர்வதால்தான் இந்து மதத்தில் பலருக்குச் சகிப்புத் தன்மை உள்ளது. அவர்கள் எல்லாக் கடவுளர் கோயில்களுக்கும் செல்கின்றனர். ஆனால் இதில் பிளவை ஏற்படுத்தியதுதான் சனாதனம். அந்தப்பிளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனால் ஒற்றுமைக் குலைவு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. “அவளைத் தொட்டதனால் ஆளுநர்தான் தன் கைகளைப் பினாயில் போட்டுக்…
42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….
38. சனாதனத் தருமத்தில் தீண்டாமைக்கு இடமில்லை(ஆளுநர் இரவி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்பது அறிவிலித்தனம் 40. சனாதனத்திற்கு ஆதரவாக நாடே கொந்தளிக்கிறது.- பொய்மைகள்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்று அறிவிலித்தனமாகக் கூவி வருகிறதே! எத்தனை உதாரணம் சொல்லிப் புரிய வைக்க முயன்றாலும் மேலை நாட்டுப் பணத்துக்காக மானத்தை விற்ற கூட்டம் செவிப் புலன்களையும் விற்று விட்டது. எதுவும் காதில் ஏறாது. – ச.சண்முகநாதன் முகநூலில் சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241) சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின்…
சனாதனம் பிராமணர்களை உயர்த்திச் சொல்வதாகச் சொல்வதைப் பொய் என்னும் பொய்யும் வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரமாகச் சொல்லும் பித்தலாட்டமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை- இரவி; திருவமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ; சரிதானா? – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 31 – 32 சுயம்புவான பிரம்மா, தேவர்களுக்கு அவி சொரிந்து மகிழ்விக்கவும், பிதுரர்களுக்குச் சிரார்த்தம் செய்யவும் தக்கவனாகப் பிராமணனைத் தமது முகத்தினின்றும் முன்னம் படைத்தார் (மனு 1. 94). மாந்தரின் சமூக ஒழுக்கங்களை நன்கு புரிந்து, நிலை நிறுத்தும் பொருட்டாகவே சீவராசிகள் அனைத்திலும் மேலானதொரு தலைமையை அவன் பெற்றிருக்கிறான் (மனு , 1 : 99). பிறவி மேன்மையினாலும், முகத்திலிருந்து உதித்த தகுதியினாலும்,…
சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை-ஆளுநர் இரவி;பெண்களைப் பரத்தையர் என்று திருவமாவளவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்-குட்பூ – சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி – தொடர்ச்சி) சூத்திரனுக்குத் தாழ்வான பெயர் சூட்டுக; பிராமணனுக்கு மங்களத்தையும்; சத்திரியனுக்கு வலிமையையும் வைசியனுக்குப் பொருளையும்; சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டும். – (மனு 2 . 31, 32) அப்படிப் பெயர் சூட்டுவதற்காக உயர்வு தாழ்வுப் பெயர் முடிவுகளையும் மனு கூறுகிறது. “பிராமணனுக்குச் சருமாவென்பதையும்; சத்திரியனுக்கு வருமம் என்பதையும்; வைசியனுக்குப் பூதி யென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்பேராக இடவேண்டியது.- (மனு 2.32) வருண வேறுபாட்டை வரையறுத்து ஒரு பிரிவினரை மிக…
மனிதர்களிடையே பாகுபாட்டை உண்டாக்குவது சனாதனம் இல்லை என்கிறாரே ஆளுநர் இரவி -இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? –தொடர்ச்சி) உழைப்பிலும் உழைப்பிலிருந்து கிடைக்கும் ஊதியத்திலும் பாகுபாடு கற்பித்து இழிவுபடக் கூறும் சனாதனத்தை ஏற்போர் மனித நேயமற்றவர்களாகத்தான் இருப்பார்கள். பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” (மனு 8.413) என்கிறது சனாதனம். பிராமணன் உழைக்கமாட்டானாம் . சூத்திரன் என அவனால் சொல்லப்படும் பிரிவினர் உழைக்கும் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வானாம். “ஒருவேளை, சூத்திரன் எனப்படுவோன் தான் உழைத்துப் பெற்ற ஊதியத்தைப் பிராமணனுக்குத் தராவிட்டால் என்…
ஆளுநராயினும் நா காக்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநராயினும் நா காக்க! வரலாற்றை அறியாமலும் அறிந்தும் வரலாற்றை மறைத்தும் யாராக இருந்தாலும் உளறக்கூடாது என்பதை உணர்ந்து உண்மையைக் கூற வேண்டிய உயர்ந்த பொறுப்பில் உள்ள ஆளுநர், தமிழ்நாடு என்னும் பெயரை அகற்றும் வகையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள் 355) என்பதை உணர்ந்து பேச வேண்டியவர், தமிழ்நாடு என்னும் பெயரின் உண்மை வரலாறு அறியாமல் இப்பெயரை மாற்ற வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார். “தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்….