இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? – தமிழ்நெஞ்சன்

இந்தியா ஒரே நாடென்றால் ஏன் வரவில்லை காவிரி? காலில் முள் குத்தினால் கைபோகும் எடுக்க கண்களில் கண்ணீர் வரும் வலி உணர்த்தும் மூளை இது உடலியக்கம் உயிரியக்கம் ஆனால் இந்தியா ஒரே நாடு என்றே கூப்பாடு இருந்தும் ஏன்வரவில்லை காவிரி? பாலாறு? முல்லை பெரியாறு? இந்தியா நாடல்ல துணைக்கண்டம் தமிழகம் மாநிலமல்ல தனிநாடு ஒரேநாடென்றால் கருநாடகாவில் இருந்து தமிழன் ஏதிலியாய் தமிழ்நாட்டிற்கு வருவதேன்? ஆங்கிலேயன் வருவதற்கு முன் இந்தியா இல்லை 56 தேசமாக இருந்தது இந்து ×தமிழன் இந்தி ×தமிழ்மொழி இந்தியா × தமிழ்நாடு…

தமிழ் இனப்படுகொலை கூட்டரசு இந்தியா! – வவுனியா மாவட்ட மக்கள்குழு கடுந்தாக்கு!

தமிழ் இனப்படுகொலை கூட்டரசு இந்தியா! – வவுனியா மாவட்ட   மக்கள்குழு கடுந்தாக்கு!   தமிழர் தாயகத்தின் தலைநகரம் திருகோணமலையில் தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்து, பொருளாதார வளம் கொழிக்கும் மூதூரின் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து, வவுனியா மாவட்டத்தில் கடந்த  ஆனி 11, 2047 / 25.06.2016 சனிக்கிழமை அன்று எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.   ‘தமிழ் இனப்படுகொலை’ கூட்டரசு இந்தியாவின் ‘இன்னுமொரு இனஅழிப்பு’ ‘சம்பூர் அனல்மின் நிலையத்திட்டத்தை நிறுத்து!’ என்று வலியுறுத்தி பதாதையைத் தாங்கியவாறு, வவுனியா மாவட்ட  மக்கள்…

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)

அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான  சரக்குஅஞ்சல் – தூது அஞ்சல் (கார்கோ-கூரியர்)   துபாயில் செயல்பட்டு வரும்  தூதஞ்சல் நிறுவனமான எம்ஃச்டார் (EMSTAR COURIER & CARGO LLC) அமீரகத்திலிருந்து தாயகத்திற்கு விரைவான சரக்குஅஞ்சல் தூது அஞ்சல் சேவையினை வழங்கி வருகிறது. சரக்கு(கார்கோ)க்கு அயிரைக்கல்(கிலோ) ஒன்றுக்கு 10 திர்ஃகாம்  கட்டணமாகப் பெறப்படுகிறது.   பொதிவுச்சிப்பம் (packing).வான்வழிக் கட்டணம் தனி. அமீரகம், வளைகுடா, இந்தியா முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்கும்  தூதஞ்சல் பணி இருந்து வருகிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள எம்ஃச்டார்  தூதஞ்சல் பணியூழியத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு வேண்டிய…

கிரேக்க, எகிப்திய நாகரிகங்கள் தமிழ் நாகரிகத்தின் கிளைகளே! – இராமச்சந்திர(தீட்சித)ர்

  கிரேக்க, எகிப்திய நாட்டுத் தொல்பழம் நாகரிகத்தின் வடிவமைப்பாளர்கள் யாவர்? காரணகர்த்தர் யாவர்?. அவை ஆரியமொழி எதையும், அதாவது ஆரிய அடிப்படை எதையும் பேசவில்லை. அங்ஙனமாகவே, அவை தொல்பழங்காலத் தமிழ் நாகரிக மரத்தின் கிளைகளே என்பதுதான் கொள்ளக் கிடப்பதாம். கிரீட், பித்தளை, செப்பு நாகரிகத்திலிருந்து எத்தகைய இடையூறும் இல்லாமல் இரும்பு நாகரிகத்துக்குச் சென்றுவிட்டது. இந்தியாவிலும் நடந்தது சரியாக இதுவே. பித்தளை நாகரிகம் என்பது போலும் ஒரு நாகரிகம், இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இச் சூழ்நிலைகளை யெல்லாம் கணக்கில் கொண்டு கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், மத்தியத் தரைக்…

திருடன் கையில் திறவுகோல் – இராமதாசு

ஐ.நா தீர்மானம் திருடன் கையில் திறவுகோலை ஒப்படைப்பதற்கு இணையானது:  மரு.இராமதாசு   “இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும்தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.   இலங்கையில் ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு நடந்த இறுதிப்…

பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்! – ஒருவன்

( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.) நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர் உன்னத ஈகம்! பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு… அன்று, பாரதம் செய்ததோர்   மகா பாதகம்! ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட அவன் கண்மூடும்வரை   கண்திறக்கவில்லை…

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? – வைகோ கண்டனம்

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? வராகா கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியாவின் இரண்டகம் வைகோ கண்டனம்   இந்த ஆவணி 10 /ஆகத்து 27 ஆம் நாளன்று அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஃகா’ கப்பலை இலங்கைக்குத் தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சை இரண்டகம் (துரோகம்) ஆகும்.   ஈழத்தமிழர்களைக் காத்து விடுதலைத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான ஈகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை…

இந்தியா என்பது ஒரு நாடல்ல! – ஆ.சு.மணியன்

  பல ஊர்கள் இணைந்தால் ஊராட்சி ஒன்றியம். பல நாடுகள் இணைக்கப் பட்டதால் நாமிருக்கும் நாடு ஒரு நாடல்ல. ஒன்றியமாகும். அதனால்தான் அரசியல் சட்டம்  இந்திய ஒன்றியம் என்கிறது. இன்னும் தெளிவாக ‘ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா’ என்கிறது. பலருக்கு இச்சொல் புதுமையாகத் தோன்றலாம். இசுலாமானவர்கள்கூட. ‘யூனியன் முசுலிம் லீக்’ என்று பெயரிட்டுள்ளனர். அதன் பொருள் அறிந்து பெயரிட்டுள்ளார்களா என்பது கேள்விக்குரியது.   ‘யூனியன் கேபினட்’ என்கின்றனர். அதன் பொருள் ஒன்றிய அமைச்சரவை / ஒன்றிணைக்கப்பட்ட அமைச்சரவை என்பது. ‘யூனியன்கவர்ன்மெண்ட்’ என்ற சொல்லைக் கேட்டிருக்கலாம் அதன்  பொருள்…

இறையாண்மை என்றால் இதுதான் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

  2   இந்தியா என்பது பல தேசிய அரசுகளின் இணைப்பு. இதன் நிலப்பரப்பும் நிலையாக இல்லாமல், உருவான காலத்திலிருந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில்தான் இந்தியா என்னும் செயற்கை அமைப்பே உருவானது. 1858 ஆம் ஆண்டில் இன்றைய இந்தியப் பரப்புடன் இலங்கை, ஆப்கானிசுதானம், பருமா, கிழக்கு வங்காளம், சிந்து, வடமேற்கு எல்லை மாநிலம் எனப்படும் பாக்கிசுத்தான் முதலியவை சேர்ந்த பரப்பே இந்தியா எனப்பட்டது. இப்பரப்பு எல்லைக்குள்ளேயே தனியரசுகள் சிலவும் ஆங்கிலேயர் அல்லாத பிறர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளும் இன்றைக்கு இணைக்கப்பட்டவாறு இல்லாமல்…

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பது உண்மை அறியா மாந்தரின் கற்பனையுரையேயாகும். திராவிட நாகரிகமும் பண்பாடும் இந்நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து, தழைத்து, வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரமாகும். – இந்தியக் கலை-பண்பாடுகள் – தமிழ்ச்சிமிழ்

இந்தியா? – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…