இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 25
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இவர்கள் ஆரியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னால் வாழ்ந்தவர்களாவார்கள் என்று கூறலாம். ஒரு சிலர் அவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய காலத்திலோ அக்காலத்தை ஒட்டிப் பின்போ வாழ்ந்திருக்கலாம். சிலர் பெயர்களும் பாடல்களுட் பயின்ற சில சொற்களும் வடமொழியைச் சார்ந்தன என்று கருதப்பட்டன. தேவன், பூதன், கீரன் முதலியனவற்றை வடசொற்கள் என்றே கருதியோரும் உளர். இவையெல்லாம் தூய தமிழ்ச்சொற்களே. தேவன் என்ற சொல் இனியன், விருப்பத்திற்குரியன், இடத்திற்குரியன் என்னும் பல பொருளினது. பூதன், பூதம் என்ற தமிழ்ச் சொல்லினடியாகத்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ புலவர் பெயர் பாடல் தொகை 100. கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் 1 101. கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் 1 102. கிள்ளிமங்கலம்கிழார் 4 103. கீரம் கீரனார் 1 104. குடவாயிற் கீரத்தனார் 18 105. குட்டுவன் கண்ணனார் 1 106. குட்டுவன் கீரனார் 1 107. குதிரைத் தறியனார் 1…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ இனி இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும் காண்போம். புலவர் பெயர் பாடல் தொகை 1. அகம்பல்பாலாதனார் 1 2. அஞ்சியத்தை மகள் நாகையார் 1 3. அஞ்சில் அஞ்சியார் 1 4. அண்டர் மகன் குறுவழுதியார் 2 5. அதியன் விண்ணத்தனார் 1 6. அந்தில் இளங்கீரனார் 1 …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 22
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 6. பழந்தமிழ் இலக்கியம் மொழி என்பது நேருக்கு நேர் கருத்தினை அறிவிக்கும் கருவியாகப் பயன்பட உருவாக்கப்பட்டது; என்றாலும், எழுத்துகள் உண்டான பின்னர் அது கால இடையிட்டும் நாடு இடையிட்டும் கருத்தினை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படும் நிலையை அடைந்துள்ளது. உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும்; பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். குறிக்கோளை இயம்புவது…