கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 86 : தேனருவி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி-தொடர்ச்சி) பூங்கொடி தேனருவி வான முகட்டின் வாய்திறந் திறங்குதல் மானை வீழ்ந்திடும் தேன்சுவை அருவியின் 140 ஓங்குயர் தோற்றமும் ஒய்ய்யெனும் ஓசையும் பாங்கிஎன் எருத்தையும் செவியையும் வருத்தின; ————————————————————— மல்லல் – வளப்பம், தண்டாது – இடைவிடாது, கங்குல் – இரவு, மான – போல, ஒய்ய்யெனும் – ஒலிக்குறிப்பு, எருத்து – கழுத்து. ++++ வானுற நிவந்த வால்வெண் ணிறத்தூண் தானது என்னத் தயங்கி நின்றிடும்; …
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி) பூங்கொடி பொதிகைக் காட்சி தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்; முடியும் நடுவும் முகிலினம் படர்தரக் 110 கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச் சில்லெனுந் தென்றல் மெல்லென வீச நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப அலரும் மலரும் அடருங் கடறும் பலவும் குலவி நிலவும் மாமலைக் காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின் வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென் தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ? கன்மலைக்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை-தொடர்ச்சி) பூங்கொடி இசைப்பணி புரிந்த காதை சண்டிலி வருகை மணக்கும் தென்றல் மாமலை எழிலும், கோடை தவிர்க்கும் குளிர்மலைப் பொழிலும், நீடுயர் தண்ண்ணிய நீல மலையுடன் கண்டுளங் குளிர்ந்த காரிகை ஒருத்தி சண்டிலி என்பாள் சார்ந்து வணங்கித் 55 `தமிழிசை வளர்க்கும் தையாஅல் நின்னுழை அமிழ்தம் நிகர்க்கும் அவ்விசை பயிலும் ஆர்வங் கொண்டுளேன் ஆதலின் அருள்நலங் கூர்விழி யாய்நின் குழுவினுள் எனையும் சேர்த்தருள் செய்’கெனச்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 83 : 18. இசைப்பணி புரிந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்-தொடர்ச்சி) பூங்கொடி 18. இசைப்பணி புரிந்த காதை அருண்மொழி மகிழ்ச்சி எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும் பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும் விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்; தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட 5 ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே; எழிலியின் மகிழ்ச்சி இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன் …
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!-தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை பூங்கொடி இசைவு தருதல் `அன்னையிற் சால அன்புளம் காட்டி என்புலம் ஓம்பி இலங்கிட அருளினை! 95 நின்பணி அஃதேல் நேருதல் அன்றி மறுமொழி கூற யானோ வல்லேன்? மறையுமென் வாழ்வு வளர்தமிழ்ப் பணிக்கே என்றுளம் கொண்டேன் என்பணிக் கஃதும் நன்றெனின் இன்னே நவிலுதி தாயே’ 100 காவியப் பாவை என்றலும், எழிலி யாப்பின் இயலும் பாவும் வகையும் பாவின்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை தமிழைப் பழிக்க விடுவதோ! இவர்தம் பாடல் எழிலுற அச்சுச் சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம்; 65 விடுத்தஇச் சுவடிகள் அடுத்திவண் வருமவர் படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப் பழிப்பவர் ஆவர்; பைந்தமிழ் வளர்ச்சி இழித்துரை கூறுமா றிருந்ததே என்பர்; செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே 70 விடுத்திடல் நன்றோ? விளம்புதி மகளே! நிலைத்திடுங் கவிதை தொடுத்திடுங்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 75 : அடிகளார் வருகை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 – தொடர்ச்சி) பூங்கொடி 15. இசைத்திறம் உணர எழுந்த காதை- தொடர்ச்சி எழுவாய்! எழுவாய்! இன்றே எழுவாய்! தொழுவாய் அவளைத் துணையென நினைவாய்! 50 வழுவா மகளே! வாழிய பெரிதே’ என்றவள் வாழ்த்தி இருந்தனள் ஆங்கண்; அடிகளார் வருகை நன்று நன்றென நங்கையும் இயைந்தனள்; அவ்வுழி அடிகள் வருகை தந்தனர் செவ்விய மங்கையர் செங்கை கூப்பி 55 நிற்றலும் அவர்தமை நேரியர் வாழ்த்திப் `பொற்றொடி யீர்!நாம் புறக்கணிப் பாக விடுதல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச் சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5 தவறிலா அடிகள் சாற்றினர்’ என்றனள்; அருண்மொழியும் இசைதல் `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்; பூண்டநல்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் பாராட்டுரை திசைதொறும் சென்று தன்புகழ் நிறீஇ விருதுபல கொண்டு வெற்றிக் களிப்பொடு வருவோன் ஒருவன் வடபுலத் திசைவலான் ஏம கானன் எனும்பெயர் பூண்டோன் 105 தோமறு மீனவன் தொண்டும், தமிழிசைப் புலமையும், அவன்பெரும் புகழும் செவிமடுத்துக் கலைமலி காளையின் கண்முன் தோன்றி `உரவோய்! இளமையில் ஒருதனி நின்றே இரவாப் பகலாத் திறமுடன் ஆற்றும் 110 நின்னிசைப் பணிக்கு நெடிதுவந் தனனே, என்னிசைப்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 70 : மீனவன் சங்கம் புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்-தொடர்ச்சி) பூங்கொடி மீனவன் சங்கம் புகுதல் ஏதிலர் நம்மை இகழ்ந்துரை யாடநோதகச் சிலபல தீதுற் றழிந்தன;அந்தோ உலக அரங்குக் கொளிசெயுமநந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! 60மண்ணக முதல்வி! எண்ணுநர் தலைவி!நண்ணுவ தேனோ நலிவுகள் நினக்கெனக்கண்கலங்கி நெஞ்சம் புண்ணடைந் திருப்ப,ஆங்கோர் பெருமகன் அவனுழை வந்துபாங்குடன் அவனுளப் பாடுணர்த் துரைக்கும்; 65`அயரேல் மீனவ! அறைகுவென் கேள்நீ!பயில்தரு மறவர் பாண்டிய மரபினர்சங்கம் நிறுவித் தண்டமிழ்ச் சுவடிகள்எங்கெங் குளவோ அங்கெலாம் துருவிததொகுத்து வைத்துளார்; மிகுந்தஅச் சுவடிகள்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 69 : சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச் 25 சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின; இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30 வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 67 : கயவர் தாக்குதல்-தொடர்ச்சி) பூங்கொடி, கூடலில் மீனவன் பணி ஆங்கவன் றனக்குப் பூங்கொடி நல்லாய்!தீங்கொன் றுற்றது செப்புவென் கேண்மோ!கேட்குநர் உள்ளம் கிளர்ந்தெழும் பாடல்,நோக்குநர் மயக்கும் நுண்கலை ஓவியம்,கள்ளின் சுவைதரு காவியம் முதலன 5வள்ளலின் வழங்கினன் வருவோர்க் கெல்லாம்;அவ்வவர் திறனும் அறிவும் விழைவும்செவ்விதின் ஆய்ந்துணர்ந் தவ்வவர்க் குரியனபயிற்றினன், பயில்வோர் பல்கினர் நாடொறும்;மாணவன் ஐயம் செயல்திறம் நற்பயன் செய்துவரு காலை 10`இசையும் கூத்தும் இயம்பும் தமிழ்நூல்நசையுறும் ஓவியம் நவில்நூல் உளவோ?ஒருநூ லாயினும் உருவொடு காண்கிலேம்;எனஓர் ஐயம் எழுப்பினன் ஒருவன்;தமிழின் பகைகள்…