திருக்குறள் அறுசொல் உரை: 128. குறிப்பு அறிவுறுத்தல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி) 3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல் காதலர் தம்தம் உள்ளத்துள்ள் குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல் (01-05 தலைவன் சொல்லியவை) கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண், உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன. கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப், பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….